10 நாட்கள் தடைக்கு பின்னர் குற்றாலம் மெயின் அருவியில் குளிக்க இன்று அனுமதி
தென்காசி , 26 அக்டோபர் (ஹி.ச.) தென்காசி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு பெய்த கனமழை காரணமாக குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கடந்த 16ம் தேதி முதல் அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டது. கடந்த 20ம் தேதி அதிகாலை ஏற்பட்
10 நாட்கள் தடைக்கு பின்னர்  குற்றாலம் மெயின் அருவியில் குளிக்க இன்று  அனுமதி


தென்காசி , 26 அக்டோபர் (ஹி.ச.)

தென்காசி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு பெய்த கனமழை காரணமாக குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கடந்த 16ம் தேதி முதல் அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டது.

கடந்த 20ம் தேதி அதிகாலை ஏற்பட்ட பெரும் வெள்ளத்தினால் குற்றாலம் மெயின் அருவி மற்றும் பழைய குற்றால அருவி கரைகள் கடுமையாக சேதம் அடைந்தன.

அருவியை ஒட்டி அமைக்கப்பட்டிருந்த பாதுகாப்பு தடுப்பு கம்பிகளும், தரைத்தளமும் வெள்ளத்தினால் சேதம் அடைந்தது.

வெள்ளத்தினால் ஏற்பட்ட சேதத்தை சரி செய்யும் காரணத்தால் வெள்ளப்பெருக்கு குறைந்தாலும் மெயின் அருவி மற்றும் பழைய குற்றால அருவியில் குளிக்க விதிக்கப்பட்ட தடை நீட்டிக்கப்பட்டது.

ஐந்தருவி, புலி அருவிகளில் வழக்கம் போல் குளிக்க அனுமதிக்கப்பட்டது. கடந்து இரு நாட்களாக மெயின் அருவி கரையில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்த பணிகள் நிறைவடைந்ததால் தற்போது அருவிகளில் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

பழைய குற்றால அருவியில் சீரமைப்பு பணிகள் நிறைவு பெறாததால் அங்கு குளிக்க இன்னும் அனுமதி அளிக்கப்படவில்லை என்று மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குற்றாலத்தில் இன்று

(அக் 26) காலை முதல் மழைப்பொழிவு முற்றிலும் குறைந்து வெயிலின் தாக்கம் எதுவும் இல்லாமல் இதமான சூழ்நிலை நிலவுகிறது.

விடுமுறை நாளான இன்று குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. குடும்பத்துடன் வந்திருந்த சுற்றுலா பயணிகள் மெயின் அருவி உள்ளிட்ட அருவிகளில் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.

Hindusthan Samachar / vidya.b