சொத்து வரி செலுத்தாதவர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப சென்னை மாநகராட்சி முடிவு
சென்னை, 26 அக்டோபர் (ஹி.ச.) சென்னை மாநகராட்சிக்கு சொத்து வரி மற்றும் தொழில் வரி பிரதான வரி வருவாயாக உள்ள நிலையில் சுமார் 13.5 லட்சம் சொத்து உரிமையாளர்கள் மூலம் மாநகராட்சிக்கு சொத்து வரி மூலம் வருவாய் கிடைக்கிறது. அதன்படி, சென்னை மாநகராட்சிக்கு ம
Corporation


சென்னை, 26 அக்டோபர் (ஹி.ச.)

சென்னை மாநகராட்சிக்கு சொத்து வரி மற்றும் தொழில் வரி பிரதான வரி வருவாயாக உள்ள நிலையில் சுமார் 13.5 லட்சம் சொத்து உரிமையாளர்கள் மூலம் மாநகராட்சிக்கு சொத்து வரி மூலம் வருவாய் கிடைக்கிறது.

அதன்படி, சென்னை மாநகராட்சிக்கு முதல் அரையாண்டுக்கான சொத்து வரியை ஏப்ரல்

1-ந்தேதி முதல் செப்டம்பர் 30-ந்தேதி வரையிலும்,

2-வது அரையாண்டுக்கான சொத்து வரியை அக்டோபர் 1-ந்தேதி முதல் மார்ச்

31-ந்தேதி வரையிலும் செலுத்த வேண்டும்.

2025-26-ம் நிதியாண்டின் முதல் அரையாண்டுக்கான சொத்து வரி கடந்த ஏப்ரல் மாதம் முதல் வசூலிக்கப்பட்டு வந்தது. மாநகராட்சியின் வரி வசூலிப்பாளர்கள் மூலமும், இணையதளம் வாயிலாகவும் வரி வசூல் நடைபெற்றது.

முதல் அரையாண்டுக்கான சொத்து வரி வருவாய் ரூ.1,300 கோடி வரையில் வசூல் செய்ய மாநகராட்சி இலக்கு நிர்ணயித்தது. ஆனால், ரூ.1,002 கோடி மட்டுமே வசூலானது. சுமார் 2 லட்சம் பேர் வரையில் சொத்து வரியை செலுத்தாமல் நிலுவை வைத்துள்ளதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில், முதல் அரையாண்டுக்கான சொத்து வரியை செலுத்தாத நபர்கள் வரும்

31-ந்தேதிக்குள் சொத்து வரியை செலுத்திட வேண்டுமென மாநகராட்சி சார்பில் கால நீட்டிப்பு வழங்கப்பட்டது.

வரும் 31-ந்தேதிக்குள் சொத்து வரி செலுத்தாத நபர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது.

ரூ.1 கோடிக்கு மேல் நிலுவை வைத்துள்ள நபர்களின் வீடுகளுக்கு நேரடியாக சென்று எச்சரிக்கை அறிவிப்பு ஒட்டப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது..

சென்னை மாநகராட்சியில் 2-வது அரையாண்டுக்கான சொத்து வரி கடந்த 1-ந்தேதி முதல் வசூலிக்கப்பட்டு வருகிறது. கடந்த 24 நாட்களில் ரூ.265 கோடி சொத்து வரி வசூலிக்கப்பட்டுள்ளது.

வரும் 31-ந் தேதிக்குள் சொத்து வரியை செலுத்தும் நபர்களுக்கு மாநகராட்சி சார்பில் 5 சதவீதம், அதிகபட்சமாக ரூ.5 ஆயிரம் வரை தள்ளுபடி வழங்கப்படும்.

முதல் அரையாண்டுக்கான சொத்து வரியை செலுத்தாமல் உள்ள நபர்கள் குறித்த விவரங்களை சேகரித்து வருகிறோம்.

அவர்களுக்கு அடுத்த மாதம் 1-ந் தேதி முதல் நோட்டீஸ் அனுப்ப இருக்கிறோம். ரூ.1 கோடிக்கு மேல் நிலுவை வைத்துள்ள நபர்களின் வீடுகளுக்கு நேரடியாக சென்று மாநகராட்சி அதிகாரிகள் நோட்டீஸ் ஒட்டுவார்கள்.

அபராதம் விதிப்பது குறித்தும் ஆலோசித்து வருகிறோம்.

அந்த வகையில், 2-வது அரையாண்டுக்கான சொத்து வரி ரூ.1,400 கோடி வரையில் வசூலிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. .

Hindusthan Samachar / P YUVARAJ