Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 27 அக்டோபர் (ஹி.ச.)
மோந்தா புயல் சென்னைக்கு 560 கி.மீ தொலைவில் நிலைகொண்டுள்ளது.
காக்கிநாடாவுக்கு 620 கி.மீ. தெற்கு தென்கிழக்கிலும், விசாகப்பட்டுனத்துக்கு 650 கி.மீ தொலைவிலும், அந்தமானின் போர்ட் பிளேரில் இருந்து 810 கி.மீ. தொலைவில் மோன்தா புயல் மையம் கொண்டுள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
புயல் அடுத்த 12 மணி நேரத்தில் மேற்கு - வடமேற்கு நோக்கி நகரும். மோந்தா புயல் மசூலிப்பட்டினம் - கலிங்கப்பட்டினம் இடையே நாளை இரவு கரையை கடக்கும். புயல் கரையை கடக்கும்போது மணிக்கு 90-100 கி.மீ. வேகத்தில் காற்று வீசும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
புயலை முன்னிட்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை, கடலூர், தூத்துக்குடி உள்பட தமிழக துறைமுகங்கள் மற்றும் புதுச்சேரியில் உள்ள 9 துறைமுகம் என துறைமுகங்களில் கடந்த 25-ந்தேதி அன்று 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.
இந்நிலையில், புயல் பாதிப்புகளில் இருந்து பாதுகாத்து கொள்ளும் வகையில், சென்னை, எண்ணூர், காட்டுப்பள்ளி, கடலூர், நாகப்பட்டினம், பாம்பன், தூத்துக்குடி, புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய 9 துறைமுகங்களில் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு இன்று (அக் 27) ஏற்றப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / vidya.b