நவம்பர் 2-ல் விண்ணில் பாய்கிறது இந்தியாவின் மிகப் பெரிய தகவல் தொடர்பு செயற்கைக்கோளான சிஎம்எஸ் -03 - இஸ்ரோ தகவல்
புதுடில்லி, 28 அக்டோபர் (ஹி.ச.) ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து வரும் நவம்பர் 2ம் தேதி சிஎம்எஸ்-03 செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்படும். இந்தியாவின் மிகப் பெரிய தகவல் தொடர்பு செயற்கைக்கோளான 4,400 கிலோகிராம் எடையை சிஎம்எஸ
நவம்பர் 2ல் விண்ணில் பாய்கிறது இந்தியாவின் மிகப் பெரிய தகவல் தொடர்பு செயற்கைக்கோளான சிஎம்எஸ்-03 -  இஸ்ரோ தகவல்


புதுடில்லி, 28 அக்டோபர் (ஹி.ச.)

ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து வரும் நவம்பர் 2ம் தேதி சிஎம்எஸ்-03 செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்படும்.

இந்தியாவின் மிகப் பெரிய தகவல் தொடர்பு செயற்கைக்கோளான 4,400 கிலோகிராம் எடையை சிஎம்எஸ்-03 இஸ்ரோ விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்ட தகவல் தொடர்பு செயற்கைக்கோள் ஆகும்.

இந்த செயற்கைக்கோள் கடல் பகுதி முழுவதும் தகவல் தொலைத் தொடர்பு கவரேஜை வழங்க வடிவமைக்கப்பட்டு உள்ளது.

இப்போது செயற்கைக்கோள் ஏவுதலுக்கு முந்தைய நடவடிக்கைகள் தொடங்கிவிட்டன. மேலும் ராக்கெட் முழுமையாக இணைக்கப்பட்டு அக்டோபர் 26ம் தேதி ஏவுதளத்தில் நிலை நிறுத்தப்பட்டது.

இந்த, செயற்கைக்கோள் தகவல்தொடர்புகளில் இந்தியாவின் பலத்தை உறுதிப்படுத்தும்.

மனித விண்வெளிப் பயண திட்டங்களுக்கு உதவி கரமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Hindusthan Samachar / JANAKI RAM