மோந்தா புயல் காரணமாக இன்றும் பெங்களூரு-நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரெயில் ரத்து
சென்னை, 29 அக்டோபர் (ஹி.ச.) வங்கக்கடலில் உருவான ‘மோந்தா’ புயலின் காரணமாக ஆந்திரா மற்றும் தமிழ்நாடில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் மோந்தா புயல் காரணமாக எஸ்.எம்.வி.டி. பெங்களூரு-நாகர்கோவில்-எஸ்.எம்.வி.டி. பெங்களூர
மோந்தா புயல் காரணமாக இன்றும் பெங்களூரு-நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரெயில் ரத்து


சென்னை, 29 அக்டோபர் (ஹி.ச.)

வங்கக்கடலில் உருவான ‘மோந்தா’ புயலின் காரணமாக ஆந்திரா மற்றும் தமிழ்நாடில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.

இந்த நிலையில் மோந்தா புயல் காரணமாக எஸ்.எம்.வி.டி. பெங்களூரு-நாகர்கோவில்-எஸ்.எம்.வி.டி. பெங்களூரு (வண்டி எண்: 17235/36) எக்ஸ்பிரஸ் ரெயில்கள் நேற்றும், எஸ்.எம்.வி.டி. பெங்களூரு-நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரெயில் (17235) இன்றும் (அக் 29) ரத்து செய்யப்பட்டுள்ளது.

இந்த ரெயில், ஆந்திர மாநிலம் கச்சேகுடா செல்லும் ரெயிலுக்கு இணைப்பு ரெயிலாக இயங்குகிறது. ஆந்திராவில் புயல் கரையை கடப்பதால் இந்த பெங்களூரு-நாகர்கோவில் ரெயில் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரெயில்வே நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.

இதனால் அந்த ரெயிலில் பயணம் செய்ய முன்பதிவு செய்திருந்த பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Hindusthan Samachar / vidya.b