Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 29 அக்டோபர் (ஹி.ச.)
வங்கக்கடலில் உருவான ‘மோந்தா’ புயலின் காரணமாக ஆந்திரா மற்றும் தமிழ்நாடில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.
இந்த நிலையில் மோந்தா புயல் காரணமாக எஸ்.எம்.வி.டி. பெங்களூரு-நாகர்கோவில்-எஸ்.எம்.வி.டி. பெங்களூரு (வண்டி எண்: 17235/36) எக்ஸ்பிரஸ் ரெயில்கள் நேற்றும், எஸ்.எம்.வி.டி. பெங்களூரு-நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரெயில் (17235) இன்றும் (அக் 29) ரத்து செய்யப்பட்டுள்ளது.
இந்த ரெயில், ஆந்திர மாநிலம் கச்சேகுடா செல்லும் ரெயிலுக்கு இணைப்பு ரெயிலாக இயங்குகிறது. ஆந்திராவில் புயல் கரையை கடப்பதால் இந்த பெங்களூரு-நாகர்கோவில் ரெயில் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரெயில்வே நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.
இதனால் அந்த ரெயிலில் பயணம் செய்ய முன்பதிவு செய்திருந்த பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
Hindusthan Samachar / vidya.b