பராமரிப்பு பணி காரணமாக சென்னையில் நாளை ஒரு சில இடங்களில் மின்தடை
சென்னை, 29 அக்டோபர் (ஹி.ச.) பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னையில் நாளை (அக் 30) ஒரு சில இடங்களில் மின்தடை ஏற்படவுள்ளது. இது குறித்து தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, சென்னையில் 30.10.2025 அன
பராமரிப்பு பணி காரணமாக சென்னையில் நாளை ஒரு சில இடங்களில் மின்தடை


சென்னை, 29 அக்டோபர் (ஹி.ச.)

பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னையில் நாளை (அக் 30) ஒரு சில இடங்களில் மின்தடை ஏற்படவுள்ளது.

இது குறித்து தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,

சென்னையில் 30.10.2025 அன்று காலை 09:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2:00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

தேனாம்பேட்டை: போயஸ் கார்டன், திருவள்ளுவர் சாலை, ஜெயம்மாள் சாலை, இளங்கோ சாலை, போயஸ் சாலை, ராஜகிருஷ்ணா சாலை, எல்டாம்ஸ் சாலை, பெரியார் சாலை, காமராஜர் சாலை, சீதாம்மாள் காலணி , கேபிதாசன் சாலை, பாரதியார் சாலை, பக்தவச்சலம் சாலை, அப்பாதுரை சாலை. டி.டி.கே. சாலை, கத்திட்ரல் சாலை, ஜே.ஜே. சாலை, பார்த்தசாரதி பேட்டை மற்றும் கார்டன், கே.ஆர். சாலை, ஜார்ஜ் அவென்யூ, எஸ்.எஸ்.ஐ சாலை, எச்.டி. ராஜா தெரு, ஏ.ஆர்.கே. காலனி, அண்ணா சாலை, வீனஸ் காலனி, முர்ரேஸ் கேட் சாலை

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / vidya.b