Enter your Email Address to subscribe to our newsletters

கன்னியாகுமரி, 30 அக்டோபர் (ஹி.ச.)
கன்னியாகுமரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி பெய்து வருகிறது.
இதன் காரணமாக மாவட்டத்தில் உள்ள முக்கிய அணைகளான பேச்சிபாறை அணை, பெருஞ்சாணி, சிற்றாறு அணைகளில் வேகமாக நீர்மட்டம் உயர்ந்தது.
பேச்சுப்பாறை அணை முழுகொள்ளளவை எட்டியதை தொடர்ந்து, முதற்கட்டமாக 500 கனஅடி நீரும், தொடர்ந்து, 2,500 கனஅடி தண்ணீரும் உபரிநீராக திறந்துவிடபட்டது. இதன் காரணமாக கோதையாற்றில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. தாமிரபரணி, கோதையாறு கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து திற்பரப்பு அருவியில் வெள்ளம் ஏற்பட்டது. நீச்சல் குளம், கல்மண்டபங்களை மூழ்கடித்து தண்ணீர் சென்றது. இதன் காரணமாக கடந்த 7 நாட்களாக திற்பரப்பு அருவியில் சுற்றுலாபயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
இன்று (அக் 30) மாவட்டம் முழுவதும் சற்று மழை அளவு சற்று குறைந்தாலும் வெள்ளம் குறையவில்லை.
மேலும் மழை நீடிக்க வாய்ப்புள்ளதால் தொடர்ந்து திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகளை அனுமதிக்க தடை நீடிக்கிறது.
Hindusthan Samachar / vidya.b