வால்பாறைக்குச் செல்ல நவ 1 ஆம் தேதி முதல் இ-பாஸ் கட்டாயம் - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
கோவை, 30 அக்டோபர் (ஹி.ச.) கோவை மாவட்டத்தில் முக்கிய சுற்றுலா தளமாக விளங்கும் வால்பாறைக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். இந்த நிலையில், வரும் நவம்பர் 1-ந்தேதியில் வால்பாறைக்கு வரும் சுற்றுலா பயணி
வால்பாறைக்கு செல்ல நவ 1 ஆம் தேதி  முதல் இ-பாஸ் கட்டாயம் - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு


கோவை, 30 அக்டோபர் (ஹி.ச.)

கோவை மாவட்டத்தில் முக்கிய சுற்றுலா தளமாக விளங்கும் வால்பாறைக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர்.

இந்த நிலையில், வரும் நவம்பர் 1-ந்தேதியில் வால்பாறைக்கு வரும் சுற்றுலா பயணிகள் அனைவரும் கட்டாயம் இ-பாஸ் பெற வேண்டும் என கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது,

சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுப்படி நவம்பர் 01 ஆம் தேதி முதல் வால்பாறைக்கு வரும் வாகனங்களுக்கு ஈ - பாஸ் வழங்கும் முறை அமல்படுத்தப்பட உள்ளது.

எனவே சுற்றுலாப் பயணிகள் தங்களது வாகனங்களுக்கு ஈ - பாஸ் பெற இணையத்தளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். அதோடு ஆழியாறு, சோலையார் சோதனை சாவடிகளிலும் ஈ - பாஸ் பெற முடியும். மேலும் ஈ - பாஸ் இல்லாத வாகனங்கள் வால்பாறைக்குள் அனுமதிக்கப்படாது. அதோடு தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை எடுத்து வரக்கூடாது.

சுற்றுலா பயணிகள் இ-பாஸ் பெற்று வருவதை கண்காணிக்க வருவாய்த்துறையினர், வனத்துறையினர், காவல்துறையினர் மற்றும் உள்ளாட்சித்துறையினர் சோதனைச் சாவடிகளில் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / vidya.b