Enter your Email Address to subscribe to our newsletters


கோவை, 30 அக்டோபர் (ஹி.ச.)
பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் குருபூஜையையொட்டி கோவை பள்ளபாளையத்தில் முத்துராமலிங்க தேவரின் திருவுருவ படத்திற்கு முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பசும்பொன் முத்துராமலிங்க தேவரின், 118 வது ஜெயந்தி மற்றும் 63 வது குரு பூஜையையொட்டி, கோவை பள்ளப்பாளையத்தில் உள்ள முத்துராமலிங்க தேவரின் திருவுருவ சிலைக்கு, முன்னாள் அமைச்சரும், கழக மண்டல பொறுப்பாளருமான செந்தில்பாலாஜி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து அன்னதானம் வழங்கினார்.
இந்த நிகழ்வில், கோவை தெற்கு மாவட்ட செயலாளர் தளபதி முருகேசன், முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி, மன்னவன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Hindusthan Samachar / V.srini Vasan