இன்று தென் கொரியா உச்சிமாநாட்டில் சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்திக்கும் அமெரிக்க அதிபர் டெனால்டு டிரம்ப்
சீயோல், 30 அக்டோபர் (ஹி.ச.) 2025ஆம் ஆண்டில் ஆசிய நாடான தென் கொரியாவில் பல முக்கிய உச்சி மாநாடுகள் மற்றும் மாநாடுகள் நடைபெற்றுள்ளன. இந்நிலையில் தென் கொரியாவின் ஜியாங்ஜு நகரில், ஏ.பி.இ.சி., எனப்படும் ஆசிய - பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பின்
இன்று தென் கொரியா உச்சிமாநாட்டில் சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்திக்கும் அமெரிக்க அதிபர் டெனால்டு டிரம்ப்


சீயோல், 30 அக்டோபர் (ஹி.ச.)

2025ஆம் ஆண்டில் ஆசிய நாடான தென் கொரியாவில் பல முக்கிய உச்சி மாநாடுகள் மற்றும் மாநாடுகள் நடைபெற்றுள்ளன.

இந்நிலையில் தென் கொரியாவின் ஜியாங்ஜு நகரில், ஏ.பி.இ.சி., எனப்படும் ஆசிய - பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாடு அக்டோபர் 31ம் தேதி மற்றும் நவம்பர் 1ல் நடக்க உள்ளது.

இதில் பங்கேற்பதற்காக தென்கொரியா செல்லும் டிரம்ப் அங்கு சீன அதிபர் ஜி ஜின்பிங்கை இன்று (அக்.30ல்) சந்தித்து பேச உள்ளார்.

ஆறு ஆண்டுகளுக்கு பின் நடைபெற உள்ள இந்த சந்திப்பின்போது அமெரிக்காவின் வரிவிதிப்பு விவகாரம் மற்றும் வர்த்தக போர் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து இரு நாட்டு தலைவர்களும் சந்தித்து பேச இருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

Hindusthan Samachar / JANAKI RAM