இன்று தேவர் குருபூஜை விழா - முத்துராமலிங்கத் தேவரின் நினைவிடத்தில் குடியரசுத் துணை தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் மரியாதை
ராமநாதபுரம், 30 அக்டோபர் (ஹி.ச.) ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவரின் 63-வது குருபூஜை விழா மற்றும் 118-வது ஜெயந்தி விழா ஆகியவை யாகசாலை பூஜை, லட்சார்ச்சனையுடன் நேற்று முன்தினம் (அக் 28) தொடங்கின. நேற்று(அக் 29)
இன்று தேவர் குருபூஜை விழா - முத்துராமலிங்கத் தேவரின் நினைவிடத்தில் குடியரசுத் துணை தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் மரியாதை செலுத்தினார்


ராமநாதபுரம், 30 அக்டோபர் (ஹி.ச.)

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவரின் 63-வது குருபூஜை விழா மற்றும் 118-வது ஜெயந்தி விழா ஆகியவை யாகசாலை பூஜை, லட்சார்ச்சனையுடன் நேற்று முன்தினம் (அக் 28) தொடங்கின. நேற்று(அக் 29) 2-வது நாளாக யாகசாலை பூஜை, லட்சார்ச்சனை விழா நடைபெற்றது.

ஏராளமான பொதுமக்கள் பால்குடம், முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக வந்தனர். நூற்றுக்கணக்கானோர் வரிசையில் நின்று தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.

இன்று (அக். 30) தேவர் ஜெயந்தி மற்றும் குருபூஜை விழா அரசு விழாவாக நடைபெறுகிறது. இன்று காலை 8.30 மணிக்கு குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். அவருடன் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் பாஜக நிர்வாகிகளும் மரியாதை செலுத்தினர்.

தொடர்ந்து, சி.பி.ராதாகிருஷ்ணன் தேவர் வாழ்ந்த வீட்டைப் அவர் பார்வையிட்டார். இதற்காக குடியரசு துணைத் தலைவர் மதுரை விமான நிலையத்திலிருந்து இந்திய விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் பசும்பொன் தேவர் நினைவிடம் அருகே அமைக்கப்பட்டுள்ள ஹெலிபேட் தளத்தில் இன்று காலை வந்திறங்கினார்.

இதேபோல, இன்று மதுரையிலிருந்து காரில் பசும்பொன் வரும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்த உள்ளார்.

தேவர் குருபூஜை விழாவை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் தென் மண்டல ஐ.ஜி. பிரேம் ஆனந்த் சின்ஹா தலைமையில், ராமநாதபுரம் சரக டிஐஜி மூர்த்தி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜி.சந்தீஷ் மற்றும் 10 ஆயிரம் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Hindusthan Samachar / vidya.b