நவ. 2-ம் தேதி அனைத்து கட்சி கூட்டம் - 60 கட்சிகளுக்கு திமுக அழைப்பு
சென்னை, 31 அக்டோபர் (ஹி.ச.) தமிழகம் உட்பட 12 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிக்கான அறிவிப்பை தேர்தல் ஆணையம் கடந்த அக். 27-ம் தேதி வெளியிட்டு, பணிகளைத் தொடங்கியது. தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல
நவ. 2-ம் தேதி அனைத்து கட்சி கூட்டம் - 60 கட்சிகளுக்கு திமுக அழைப்பு


சென்னை, 31 அக்டோபர் (ஹி.ச.)

தமிழகம் உட்பட 12 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிக்கான அறிவிப்பை தேர்தல் ஆணையம் கடந்த அக். 27-ம் தேதி வெளியிட்டு, பணிகளைத் தொடங்கியது.

தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப்பணிகள் வருகிற 4-ம் தேதி முதல் தொடங்கப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த சிறப்பு வாக்காளர் குறித்த திருத்தத்துக்கு திமுக, காங்கிரஸ், தேமுதிக, நாம் தமிழர் உள்ளிட்ட 10 கட்சிகள் எதிர்ப்புத் தெரிவித்தன.

இது தொடர்பாக திமுக கூட்டணி கட்சிகள் கடந்த

27-ம் தேதி சென்னையில் ஆலோசனை நடத்தின. இதில், எஸ்ஐஆர் தொடர்பாக சென்னையில் நவ. 2-ம் தேதி அனைத்துக் கட்சி கூட்டம் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.

அதன்படி முதல்வர் ஸ்டாலின் தலைமையில் வருகிற 2-ம் தேதி அனைத்து கட்சி கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. சென்னை தி.நகரில் உள்ள அக்கார்டு நட்சத்திர ஓட்டலில் இந்த கூட்டம் நடைபெறுகிறது.

அதன்படி திமுக தலைமை நிலைய செயலாளர் பூச்சி முருகன், துறைமுகம் காஜா, ஆஸ்டின் ஆகியோர் ஒவ்வொரு கட்சி தலைவர்களின் அலுவலகங்களுக்கு சென்று அழைப்பு கடிதம் கொடுத்து வருகின்றனர்.

அந்த வகையில் தவெக கட்சி பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்தை பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் பூச்சி முருகன் சந்தித்து அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்குமாறு அழைப்பு கடிதத்தை வழங்கினார்.

அதே போல் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன், த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன், தே.மு.தி.க.தலைவர் பிரேமலதா விஜயகாந்த், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் முக்குலத்தோர் புலிப்படைத் தலைவர் கருணாஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி உள்ளிட்ட கட்சி

அலுவலகங்களுக்கு சென்று பூச்சி முருகன் அழைப்பு கடிதம் வழங்கி உள்ளார்.

மற்றொரு தி.மு.க. தலைமை நிலையச்செயலாளரான துறைமுகம் காஜா, தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர்

சீமான், ம.தி.மு.க. பொதுச்செ செயலாளர் வைகோ, திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, கொங்குநாடு மக்கள் தேசிய. கட்சித் தலைவர் ஈசுவரன், தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காதர் மொய்தீன் மற்றும் நெல்லை முபாரக், தமிமுன் அன்சாரி, ஜவாஹிருல்லா, ஜான்பாண்டியன் உள்ளிட்ட தலைவர்களின் கட்சி அலுவலகங்களுக்கு சென்று அழைப்பு கடிதங்களை வழங்கினார்.

மேலும் இன்னொரு தலைமை நிலையச் செயலாளரான ஆஸ்டினும் அழைப்பு கடிதங்களை வழங்கி வருகிறார்.பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி. டி.வி.தினகரன், அ.தி.மு.க. தொண்டர் உரிமை மீட்புக்குழு தலைவர் ஓ.பன்னீர் செல்வம், பொன்குமார், பஷீர் அகமது உள்ளிட்ட 60

கட்சி தலைவர்களுக்கும் அழைப்பு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகிய 3 பேர்களுக்கு மட்டும் கூட்டத்தில் பங்கேற்குமாறு அழைப்பு விடுக்கப்படவில்லை என்று திமுக தலைமை நிர்வாகிகள் தெரிவித்தனர்.

Hindusthan Samachar / vidya.b