முகூர்த்த தினத்தை முன்னிட்டு இன்று சார்பதிவாளர் அலுவலகங்களில் கூடுதல் டோக்கன்கள் ஒதுக்கீடு - பதிவுத்துறை அறிவிப்பு
சென்னை, 31 அக்டோபர் (ஹி.ச.) ஐப்பசி மாத முகூர்த்த தினத்தை முன்னிட்டு இன்று (அக் 31) சார்பதிவாளர் அலுவலகங்களில் கூடுதல் டோக்கன்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக பதிவுத்துறை வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ஐப்பசி
முகூர்த்த தினத்தை முன்னிட்டு இன்று சார்பதிவாளர் அலுவலகங்களில் கூடுதல் டோக்கன்கள் ஒதுக்கீடு - பத்திரப்பதிவுத் துறை அறிவிப்பு


சென்னை, 31 அக்டோபர் (ஹி.ச.)

ஐப்பசி மாத முகூர்த்த தினத்தை முன்னிட்டு இன்று (அக் 31) சார்பதிவாளர் அலுவலகங்களில் கூடுதல் டோக்கன்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பதிவுத்துறை வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

ஐப்பசி மாதத்தில் வரும் சுபமுகூர்த்த தினமான இன்று கூடுதலாக முன்பதிவு வில்லைகள் ஒதுக்கீடு செய்யுமாறு பல்வேறு தரப்பு பொதுமக்களிடமிருந்து கோரிக்கைகள் பெறப்பட்டுள்ளன.

எனவே, ஐப்பசி மாதத்தில் வரும் சுபமுகூர்த்த தினமான இன்று ஒரு சார்பதிவாளர் உள்ள அலுவலகங்களுக்கு 100க்கு பதிலாக 150 முன்பதிவு டோக்கன்களும் இரண்டு சார்பதிவாளர்கள் உள்ள அலுவலகங்களுக்கு 200க்கு பதிலாக 300 முன்பதிவு டோக்கன்களும் அதிகளவில் ஆவணப் பதிவுகள் நடைபெறும் 100 அலுவலகங்களுக்கு 100க்கு பதிலாக 150 சாதாரண முன்பதிவு டோக்கன்களோடு, ஏற்கனவே வழங்கப்படும் 12 தட்கல் முன்பதிவு டோக்கன்களோடு கூடுதலாக 4 தட்கல் முன்பதிவு டோக்கன்களும் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / vidya.b