தண்டவாளப் புதுப்பித்தல் பணிகள் காரணமாக ஈரோடு -செங்கோட்டை விரைவு ரெயில் இயக்கம் பகுதியளவு ரத்து - ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு
சென்னை, 31 அக்டோபர் (ஹி.ச.) தண்டவாளப் புதுப்பித்தல் பணிகள் காரணமாக ஈரோடு -செங்கோட்டை விரைவு ரெயில் இயக்கம் இன்று (அக் 31) முதல் நவ 29 ஆம் தேதி வரை பகுதியளவு ரத்து செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப
தண்டவாளப் புதுப்பித்தல் பணிகள் காரணமாக ஈரோடு -செங்கோட்டை விரைவு ரெயில் இயக்கம் பகுதியளவு ரத்து - ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு


சென்னை, 31 அக்டோபர் (ஹி.ச.)

தண்டவாளப் புதுப்பித்தல் பணிகள் காரணமாக ஈரோடு -செங்கோட்டை விரைவு ரெயில் இயக்கம் இன்று (அக் 31) முதல் நவ 29 ஆம் தேதி வரை பகுதியளவு ரத்து செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,

மதுரை ரெயில்வே கோட்டத்தில் வாடிப்பட்டி, சமயநல்லூர் ரெயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளப் புதுப்பித்தல் (Track Renewal) பணிகள் நடைபெறுவதால்,

பின்வரும் ரெயில் சேவைகள் பகுதியளவு ரத்து செய்யப்படுகின்றன.

பகுதியளவு ரத்து செய்யப்பட்ட ரெயில்கள்:

1. ஈரோடு சந்திப்பு-செங்கோட்டை விரைவு ரெயில் (ரயில் எண்: 16845):

புறப்படும் நேரம்: ஈரோடு சந்திப்பில் இருந்து மதியம் 2 மணிக்கு.

பகுதியளவு ரத்து: திண்டுக்கல், செங்கோட்டை இடையே ரத்து செய்யப்படுகிறது.

ரத்துக் காலம்: 31.10.2025 முதல் 29.11.2025 வரை.

விதிவிலக்கு: நவம்பர் 4, 11, 18, & 25, 2025 (செவ்வாய் கிழமைகள்) தவிர மற்ற நாட்களில் ரத்து.

இயக்கம்: இந்த ரெயில் ஈரோட்டில் இருந்து திண்டுக்கல் வரை மட்டுமே இயக்கப்படும். திண்டுக்கல்லில் இருந்து செங்கோட்டை வரை இயக்கப்படாது.

2. செங்கோட்டை-ஈரோடு சந்திப்பு விரைவு ரெயில் (ரெயில் எண்: 16846):

புறப்படும் நேரம்: செங்கோட்டையில் இருந்து காலை 5.10 மணிக்கு.

பகுதியளவு ரத்து: செங்கோட்டை திண்டுக்கல் இடையே ரத்து செய்யப்படுகிறது.

ரத்துக் காலம்: 1.11.2025 முதல் 30.11.2025 வரை.

விதிவிலக்கு: நவம்பர் 5, 12, 19, & 26, 2025 (புதன் கிழமைகள்) தவிர மற்ற நாட்களில் ரத்து.

இயக்கம்: இந்த ரெயில் செங்கோட்டையில் இருந்து திண்டுக்கல் வரை இயக்கப்படாது. இது திண்டுக்கல்லில் இருந்து புறப்பட்டு ஈரோடு வரை மட்டும் இயக்கப்படும்.

பயணிகள் இந்த மாற்றங்களை கவனத்தில் கொண்டு தங்கள் பயணத்தை திட்டமிடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / vidya.b