Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 31 அக்டோபர் (ஹி.ச.)
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் மனுக்களை இணையவழியில் பெரும் வசதியை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.
தேர்வர்களுக்கான சேவைகளை இணையவழியில் வழங்கும் விதமாக தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் மனங்களை இணைவளியில் பெரும் வசதி தேர்வாணையத்தால் தற்போது ஏற்படுத்தப்பட்டுள்ளது.
தேர்வர்கள் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் மனுக்கள் மற்றும் முதல் மேல் முறையீட்டு மனுக்களை இணைய வழியில் rtionline.tn.gov.in என்ற இணையதளம் மூலமாக சமர்ப்பிக்கலாம்.
மேலும் தேர்வர்கள் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் மனுக்கள் மற்றும் முதல் மேல்முறையீட்டு மனுக்களை தேர்வாணையத்திற்கு கைமுறை தபால் மூலம் அனுப்புவதை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது என தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
Hindusthan Samachar / P YUVARAJ