தாயுமானவர் திட்ட பயணிகளுக்கான வயது வரம்பு 70-ல் இருந்து 65ஆக தளர்வு - தமிழக அரசு உத்தரவு
சென்னை, 1 நவம்பர் (ஹி.ச.) ஏழை எளிய மக்களுக்கு உதவுவதற்காக அரசு தரப்பிலிருந்து ரேஷன் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ரேஷன் கார்டுகளை தகுதியான மக்களுக்கு தமிழக அரசு வழங்குகிறது. ரேஷன் கார்டு வைத்திருக்கும் குடும்பங்களுக்கு அரிசி, பருப்பு
தாயுமானவர் திட்டம் பயணிகளுக்கான வயது வரம்பு 70-ல் இருந்து 65ஆக தளர்வு - தமிழக அரசு உத்தரவு


சென்னை, 1 நவம்பர் (ஹி.ச.)

ஏழை எளிய மக்களுக்கு உதவுவதற்காக அரசு தரப்பிலிருந்து ரேஷன் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

ரேஷன் கார்டுகளை தகுதியான மக்களுக்கு தமிழக அரசு வழங்குகிறது. ரேஷன் கார்டு வைத்திருக்கும் குடும்பங்களுக்கு அரிசி, பருப்பு, சர்க்கரை, கோதுமை, பாமாயில் போன்ற பொருட்கள் மானிய விலையில் வழங்கப்படுகின்றன.

மேலும் தமிழக அரசு முதியோர்கள், மாற்றுத்திறனாளிகள் என சிறப்பு பிரிவினருக்காக பல்வேறு திட்டங்களை வகுத்து செயல்படுத்தி வருகிறது. அதில் ஒன்றாக சிறப்பு கவனம் தேவைப்படும் 70 வயதுக்கு மேற்பட்ட முதியோர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு ரேஷன் பொருட்களை நேரடியாக அவர்களின் இருப்பிடத்திற்கே சென்று விநியோகிக்கும் தாயுமானவர் திட்டம் ஆகும்.

முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தை கடந்த ஆகஸ்ட் 12ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

ஒவ்வொரு மாதமும் 2-வது சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மூத்தகுடிகள் மற்றும் மாற்றுத் திறனாளிகளின் இல்லங்களுக்கு நேரடியாக சென்று குடிமை பொருட்கள் விநியோகப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், தாயுமானவர் திட்டத்திற்கான வயது வரம்பு 70-ல் இருந்து 65 ஆக தளர்த்தி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

Hindusthan Samachar / vidya.b