Enter your Email Address to subscribe to our newsletters

கொச்சி, 1 நவம்பர் (ஹி.ச.)
கர்நாடக மாநிலம் பெங்களூரு - கேரள மாநிலம் எர்ணாகுளம் இடையே விரைவில் வந்தே பாரத் ரெயில் இயக்கப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது, வந்தே பாரத் ரெயில் இயக்கப்படும் நேரத்தை ரெயில்வே அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
அதில் கூறப்பட்டுள்ளபடி,
பெங்களூரு கே.ஆர்.எஸ். ரெயில் நிலையத்தில் இருந்து காலை 5.10 மணிக்கு புறப்படும் வந்தே பாரத் ரெயில்
(வண்டி எண் 26651) அதே நாள் மதியம் 1.50 மணிக்கு எர்ணாகுளம் ஜங்ஷன் ரெயில் நிலையத்தை வந்தடைகிறது.
மறுமார்க்கத்தில், எர்ணாகுளம் ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் இருந்து மதியம் 2.20 மணிக்கு புறப்படும் வந்தே பாரத் ரெயில் (26652) இரவு 11 மணிக்கு பெங்களூரு கே.ஆர்.எஸ். ரெயில் நிலையத்தை சென்றடைகிறது.
இந்த வந்தே பாரத் ரெயில் கிருஷ்ணராஜபுரம், சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை, பாலக்காடு மற்றும் திருச்சூர் ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.
பெங்களூருவில் காலை 5.10 மணிக்கு புறப்படும் வந்தே பாரத் ரெயில் கிருஷ்ணராஜபுரத்திற்கு காலை 5.23 மணிக்கும், சேலத்திற்கு காலை 8.13 மணிக்கும், ஈரோட்டிற்கு காலை 9 மணிக்கும், திருப்பூருக்கு காலை 9.45 மணிக்கும், கோவைக்கு காலை 10.33 மணிக்கும், பாலக்காட்டிற்கு காலை 11.28 மணிக்கும், திருச்சூருக்கு மதியம் 12.28 மணிக்கும் சென்றடைகிறது. ஒவ்வொரு ரெயில் நிலையத்திலும் தலா 2 நிமிடங்கள் ரெயில் நிற்கிறது.
மறுமார்க்கத்தில் எர்ணாகுளத்தில் இருந்து மதியம் 2.20 மணிக்கு புறப்படும் இந்த வந்தே பாரத் ரெயில் திருச்சூருக்கு மதியம் 3.17 மணிக்கும், பாலக்காட்டிற்கு மாலை 4.35 மணிக்கும், கோவைக்கு மாலை 5.20 மணிக்கும், திருப்பூருக்கு மாலை 6.03 மணிக்கும், ஈரோட்டிற்கு இரவு 6.45 மணிக்கும், சேலத்திற்கு இரவு 7.18 மணிக்கும், கிருஷ்ணராஜபுரத்திற்கு இரவு 10.23 மணிக்கும் சென்றடைகிறது. திரும்பும்போதும் ஒவ்வொரு ரெயில் நிலையத்திலும் தலா 2 நிமிடங்கள் நின்று செல்லும்.
Hindusthan Samachar / JANAKI RAM