சென்னையில் நவ.3ம் தேதி முதல் 6ம் தேதி வரை முதியோருக்கு ரேஷன் பொருட்கள் வீட்டிற்கு வந்து விநியோகம் செய்யப்படும் - கூட்டுறவு சங்கம் அறிவிப்பு
சென்னை, 1 நவம்பர் (ஹி.ச) முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தின் கீழ் 65 வயதிற்கு மேற்பட்ட முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் இல்லத்திற்கே சென்று பொது விநியோகத்திட்ட பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன. அதன்படி 3.11.2025 முதல் 6.11.2
சென்னையில் நவ.3ம் தேதி முதல் 6ம் தேதி வரை முதியோருக்கு ரேஷன் பொருட்கள் வீட்டிற்கு வந்து விநியோகம் செய்யப்படும் - கூட்டுறவு சங்கம் அறிவிப்பு


சென்னை, 1 நவம்பர் (ஹி.ச)

முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தின் கீழ் 65 வயதிற்கு மேற்பட்ட முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் இல்லத்திற்கே சென்று பொது விநியோகத்திட்ட பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன.

அதன்படி 3.11.2025 முதல் 6.11.2025 வரை சென்னையில் உள்ள அண்ணாநகர், ஆலந்தூர், பெருங்குடி, சோழிங்கநல்லூர், தேனாம்பேட்டை, அடையாறு, திருவொற்றியூர், மணலி, மாதவரம், தண்டையார்பேட்டை, ராயபுரம், திரு.வி.க.நகர், அம்பத்தூர், கோடம்பாக்கம் மற்றும் வளசரவாக்கம் ஆகிய 15 மண்டலங்களில் கூட்டுறவுத்துறையின் கீழ் செயல்படும் 990 நியாயவிலை கடைகளின் விற்பனையாளர்கள், அத்தியாவசியப் பொருட்களை வீடு தேடி விநியோகம் செய்ய கூட்டுறவு சங்கம் உத்தரவிட்டுள்ளது.

Hindusthan Samachar / vidya.b