360 கிலோ வெடிமருந்துகள் பதுக்கிய மருத்துவர் கைது - காவல் ஆணையர் தகவல்
பரிதாபாத், 10 நவம்பர் (ஹி.ச.) கடந்த மே மாதம் ஜம்மு மற்றும் காஷ்மீரில் உள்ள பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பதிலடியாக இந்திய ஆயுதப் படைகளால் பாகிஸ்தான் மீது ஆப்பரேஷன் சிந்தூர் எனும் பெயரில் தாக்குதல் நடவடிக்கை வெற்றிகரமாக நடத்தப்பட்டது. ஆ
ஜம்மூ காஷ்மீரில் 360 கிலோ வெடிமருந்துகள் பதுக்கிய மருத்துவர்கள் கைது - காவல் ஆணையர் தகவல்


பரிதாபாத், 10 நவம்பர் (ஹி.ச.)

கடந்த மே மாதம் ஜம்மு மற்றும் காஷ்மீரில் உள்ள பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பதிலடியாக இந்திய ஆயுதப் படைகளால் பாகிஸ்தான் மீது ஆப்பரேஷன் சிந்தூர் எனும் பெயரில் தாக்குதல் நடவடிக்கை வெற்றிகரமாக நடத்தப்பட்டது.

ஆப்பரேஷன் சிந்தூர் தாக்குதல் சம்பவத்திற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, இந்தியாவில் பயங்கரவாத தாக்குதல்களை நடத்த பயங்கரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்தது.

இதையடுத்து, பணியில் இந்திய ராணுவத்தினரும், பயங்கரவாத தடுப்பு படையினரும் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த அக்.,27ம் தேதி ஸ்ரீநகரில் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவாக போஸ்டர் ஒட்டிய விவகாரத்தில், கடந்த வாரம் உத்தரபிரதேசத்தின் சாஹாரன்பூரில் அடில் அகமது ராதர் என்பவன் கைது செய்யப்பட்டான்.

ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் டாக்டராக பணியாற்றிய அடில் அகமது ராதர் பணிபுரிந்த இடத்தில் சோதனை செய்த போது, துப்பாக்கி மற்றும் வெடிமருந்துகள் கண்டெடுக்கப்பட்டன.

தொடர்ந்து, அவனிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கிடைத்த தகவலின் பேரில், ஹரியானாவின் பரிதாபாத்தில் உள்ள மற்றொரு டாக்டரான முஜாமில் ஷகீல் என்பவன் வீட்டில் போலீசார் சோதனை நடத்தியுள்ளனர்.

அப்போது, 360 கிலோ வெடிமருந்துகள், டைமர்கள் மற்றும் துப்பாக்கியை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள மருத்துவமனையில் ஷகீல் டாக்டராக வேலை செய்து வந்துள்ளான். இதையடுத்து, முஜாமில் ஷகீலை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

இதன் மூலம், பயங்கரவாத தாக்குதல் நடத்தும் சதித்திட்டம் அம்பலமாகியுள்ளது. கைதான நபர்களின் பின்னணி, அவர்களுடன் தொடர்பில் இருப்பவர்கள் பற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது குறித்து பரிதாபாத் போலீஸ் கமிஷனர் சதேந்தர் குமார் கூறியதாவது;

துப்பாக்கிகள், தோட்டாக்கள், 360 கிலோ வெடிமருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது அமோனியம் நைட்ரேட் என்று கண்டறியப்பட்டுள்ளது.

வெடிகுண்டு தயாரிப்புக்கான உலோகப்பொருட்கள், பேட்டரிகளுடன் கூடிய 20 டைமர்கள், 24 ரிமோட்கள், வாக்கி டாக்கிகள், மின் வயரிங், பேட்டரிகள் ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளன.

இது மட்டுமின்றி துப்பாக்கி ஒன்றும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Hindusthan Samachar / vidya.b