Enter your Email Address to subscribe to our newsletters

மதுரை, 10 நவம்பர் (ஹி.ச.)
மதுரை அவனியாபுரத்தில் தினசரி காய்கறி சந்தை செயல்பட்டு வருகின்றது.
சந்தை அருகிலே காய்கறி மொத்த வியாபார கடைகளும் உள்ளது.
இந் நிலையில் வார சந்தை என்ற பெயரில் அவனியாபுரம் விமான நிலையம் செல்லும் பிரதான சாலையில் வியாபாரத்திற்கு அனுமதி அளித்து கடை ஒன்றுக்கு 50 ரூபாய் விகிதம் சுமார் 500க்கும் மேற்பட்ட கடைகள் வசூல் செய்யப்பட்டு வருகிறது என்று பொது மக்கள் இடையே குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அவனியாபுரத்தில் மாநகராட்சி நிர்வாகம் மூலம் 100க்கும் மேற்பட்ட கடைகள் கட்டிக் கொடுக்கப்பட்டு இதில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக நாங்கள் வியாபாரம் செய்து வருகிறோம்.
எங்களிடம் மாநகராட்சி நிர்வாகம் தினசரி இருபது ரூபாய் வாடகை பெற்று வருகின்ற நிலையில் தற்போது தனிநபர் சொந்த வருமானத்திற்காக அவனியாபுரம் விமான நிலையம் செல்லும் பிரதான நெடுஞ்சாலையில் 10 மாதங்களாக வார சந்தை என்ற பெயரில் கடை ஒன்றுக்கு 50 ரூபாய் வசூல் செய்து வருகின்றனர்.
இதனால் எங்களுக்கு வியாபாரங்கள் பாதிக்கப்படுகின்றது.
இதுகுறித்து மாநகராட்சி ஆணையாளர் காவல் நிலையம் மாவட்ட ஆட்சியர் மற்றும் மக்கள் குறைதீர் கூட்டத்தில் மதுரை மேயரிடமும் மனு கொடுத்தோம்.
எங்களுக்கு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
உடனடியாக இந்த வார சந்தையை அப்புறப்படுத்த வேண்டும் தினசரி சந்தைகள் இருக்கும் பொழுது வார சந்தை என்று வைத்து போக்குவரத்திற்கு இடையூறு செய்வதாகவும் விமான நிலையம் செல்லக்கூடிய பிரதான சாலையில் இந்த வார சந்தை செயல்பட்டு வருவதால் விமான நிலையம் செல்லக்கூடிய பயணிகள் அரசு பேருந்துகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர் என்றும் வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Hindusthan Samachar / Durai.J