Enter your Email Address to subscribe to our newsletters

அரியலூர், 10 நவம்பர் (ஹி.ச.)
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவனுக்கு, மத்திய அரசு ‘இசட்’ பிரிவு பாதுகாப்பும், மாநில அரசுகள் கூடுதல் பாதுகாப்பும் வழங்க வேண்டும் என வலியுறுத்தி கடந்த அக்டோபர் மாதம் திருச்சி மாவட்ட ஒருங்கிணைந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மாவட்ட செயலாளர்கள் புல்லட் லாரன்ஸ், கனியமுதன், சக்திஆற்றலரசு, வழக்கறிஞர் கலைச்செல்வன், குருஅன்புசெல்வன் ஆகியோர் தலைமையில் திருச்சியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்நிலையில் இதே கோரிக்கையை வலியுறுத்தி அரியலூர் அண்ணாசிலை அருகே, இன்று (நவ.10) விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இப்போராட்டத்தில், திருமாவளவனுக்கு அச்சுறுத்தல்கள் அதிகம் உள்ளதால், மத்திய, மாநில அரசுகள் இசட் பிரிவு பாதுகாப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்தி பேசி வருகின்றனர்.
உண்ணாவிரத போராட்டத்துக்கு அக்கட்சியின் அரியலூர் மேற்கு மாவட்டச் செயலாளர் அங்கனூர் சிவா தலைமை வகித்துள்ளார்.
இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் கிழக்கு மாவட்டச் செயலாளர் கதிர்வளவன் உட்பட கட்சி நிர்வாகிகள் 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர்.
Hindusthan Samachar / vidya.b