Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 15 நவம்பர் (ஹி.ச.)
நெல்லையில் இருந்து மேற்கு வங்க மாநிலம் புருலியாவுக்கு வாரம் இருமுறை எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்படுகிறது.
இந்த ரெயில், நெல்லையில் இருந்து புதன் மற்றும் சனிக்கிழமைகளில் அதிகாலை 3 மணிக்கு புறப்படும்.
இந்த நிலையில், நெல்லை-புருலியா இடையிலான எக்ஸ்பிரஸ் ரெயில் இலகுரக பெட்டியாக மாற்றப்படுகிறது.
இது தொடர்பாக தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
பயணிகளின் வசதிக்காக நெல்லை-மேற்குவங்க மாநிலம் புருலியா இடையிலான எக்ஸ்பிரஸ் ரெயில் இலகுரக பெட்டியாக மாற்றப்படுகிறது. அதன்படி, நெல்லையில் இருந்து புருலியா செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்-22606) அடுத்த ஆண்டு ஜனவரி 10-ந் தேதி முதல் இலகுரக பெட்டியாக மாற்றப்பட்டு இயக்கப்படும்.
அதே போல, புருலியாவில் இருந்து நெல்லை வரும் எக்ஸ்பிரஸ் ரெயிலும் (22605) அடுத்த ஆண்டு ஜனவரி 12-ந் தேதி முதல் இலகுரக பெட்டியாக மாற்றப்பட்டு இயக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / JANAKI RAM