கொல்கத்தா டெஸ்ட் முதல் நாள் - தென் ஆப்பிரிக்கா அணி 159 ரன்களுக்கு ஆட்டமிழப்பு, சிறப்பாக பந்து வீசிய பும்ரா
கொல்கத்தா, 15 நவம்பர் (ஹி.ச.) இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டனில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் பவுமா பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி ம
கொல்கத்தா டெஸ்ட் முதல் நாள் - தென் ஆப்பிரிக்கா அணி 159 ரன்களுக்கு ஆட்டமிழப்பு, சிறப்பாக பந்து வீசிய பும்ரா


கொல்கத்தா, 15 நவம்பர் (ஹி.ச.)

இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டனில் நேற்று தொடங்கியது.

இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் பவுமா பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி முதல் இன்னிங்சை தொடங்கிய தென் ஆப்பிரிக்க அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரியான் ரிக்கல்டன் - எய்டன் மார்க்ரம் களமிறங்கினர்.

இருவரும் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதில் மார்க்ரம் தனது முதல் ரன்னை எடுக்க 23 பந்துகள் எடுத்து கொண்டார். முதல் விக்கெட்டுக்கு 57 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில் இந்த ஜோடி பிரிந்தது. ரிக்கல்டன் 23 ரன்களில் பும்ரா பந்துவீச்சில் போல்டானார்.

அடுத்து முல்டர் களமிறங்கினார். சிறிது நேரத்திலேயே மார்க்ரமையும் (31 ரன்கள்) பும்ரா காலி செய்தார். அடுத்து வந்த பவுமா (3 ரன்), குல்தீப் சுழலில் சிக்கினார். பின்னர் டோனி டி சோர்ஜி களமிறங்கினார். அவர் 24 ரன்களில் வெளியேறினார்.

தொடர்ந்து வந்த கைல் வராயன் 16 ரன்களுக்கு ஆட்டமிழந்தார் . மார்கோ ஜான்சன் டக் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். மற்ற வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்தனர்.

இறுதியில் தென் ஆப்பிரிக்கா அணி 55 ஓவர்களில் 159 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

இந்திய அணியில் சிறப்பாக பந்துவீசிய பும்ரா 5 விக்கெட்டுகளும், சிராஜ் , குல்தீப் யாதவ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

இதனை தொடர்ந்து முதல் இன்னிங்சில் இந்திய அணி விளையாடியது. தொடக்க வீரர்களாக கேஎல் ராகுல் , ஜெய்ஸ்வால் களமிறங்கினர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஜெய்ஸ்வால் மார்கோ ஜான்சன் பந்துவீச்சில் 12 ரன்களுக்கு ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார்.

தொடர்ந்து வாஷிங்டன் சுந்தர் களமிறங்கினார். கேஎல் ராகுல், வாஷிங்டன் சுந்தர் இருவரும் இணைந்து நிலைத்து ஆடி ரன்கள் குவித்தனர்.

இறுதியில் 20 ஓவர்களில் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 37 ரன்கள் எடுத்தது. கே எல் ராகுல் 13 ரன்களும், வாஷிங்டன் சுந்தர் 6 ரன்களும் எடுத்து களத்தில் உள்ளனர் .

Hindusthan Samachar / JANAKI RAM