Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 16 நவம்பர் (ஹி.ச.)
சக்திவேல் நாகப்பன் (எ) சிவசக்தி பிரபு எழுதி இயக்கி நடிக்கும் திரைப்படம்
ராட்ட
இத் திரைப்படத்தில் அரசியல்,ஆன்மீகம்,
ஜாதி மதம், வன் முறை, மது போதை பீடி சிகரெட், கலாச்சார சீர் கேடு,
சண்டை சச்சரவு, டிஜிட்டல் கைப்பேசி, போலீஸ் அடிதடி, துப்பாக்கி,கத்தி,ஆயுதம், ரத்தம், கொலை,கொள்ளை கற்பழிப்பு,
இது போன்று இல்லாமல்
வாழ்வியலை மையப்படுத்தி
தற்போதுள்ள
வாழ்க்கை நெறிமுறையை
யதார்த்தமான
திரைக்கதையில் உருவாகி இருக்கும்
திரைப்படம் ராட்ட
இத் திரைப்படத்தை பற்றி இயக்குனர் சக்திவேல் நாகப்பன் கூறும் பொழுது,
நான் பேசல,
எங்களின் படம் பேசும்,
மேல் கண்ட எந்தவித தவறான பழக்கவழக்கங்களை காட்டாத
இத் திரைப்படத்தை மக்கள் ஆதரவு தர வேண்டும்.
திரை ரசிகர்களும் மக்களும் ரசித்து கைதட்டி ஆதரிப்பார்கள் என்ற முழு நம்பிக்கை உள்ளது.
ரத்தம் சிந்த வைத்து காட்சியை எடுப்பதை விட , சிந்திக்கும் திறனை வளர்க்கும் நோக்கத்தில் திரைக்கதையை அமைத்து படத்தை ஒரு சிலையை போல் செதுக்கி உள்ளேன்.
எந்தத் தவறையும் காட்டாத திரைப்படங்களுக்கு பெருமளவில் மக்களும், மீடியாக்களும் குரல் கொடுத்து ஆதரிக்க முன்வர வேண்டும் என வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறேன், என்றார்.
இத் திரைப்படத்தை
எப் எம் எஸ் மீடியாஸ்
நிறுவனம் தயாரித்து விரைவில் வெளிவர உள்ளது.
இதில் நாகசக்தி,
ஹெலன், சித்தா தர்ஷன், சாப்ளின் பாலு, கல்பனா, வசந்தி, சுப்ரமணியம் , கிருஷ்ணன் ,சந்திரன், முத்துராஜா மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.
இத் திரைப்படத்திற்கு லோகேஷ் எடிட்டிங் செய்ய வெற்றியின் ஒளிப்பதிவில் மணிகிருஷ்ணன் இசை அமைத்திருக்கிறார்.
இந்த திரைப்படத்தின் பாடல்களை முன்னனி பாடகர்களான ராஜகணபதி, செண்பகராஜ், அபர்ணா நாராயணன், சபிக் போன்றோர் பாடி இருக்கிறார்கள்.
பாடல்களை
சரவண பிரியன் மற்றும் தமிழன் இலையா இருவரும் எழுதியிருக்கிறார்கள்.
சக்திவேல் நாகப்பன்(ஏ) சிவசக்தி பிரபு கதை திரைக்கதை எழுதி
இயக்கி உள்ளார்.
Hindusthan Samachar / Durai.J