Enter your Email Address to subscribe to our newsletters

திருப்பூர், 16 நவம்பர் (ஹி.ச.)
கர்நாடக மாநிலம் பெங்களூரில் இருந்து கேரள மாநிலம் சபரிமலை கோவிலுக்கு செல்வதற்காக 60 பேர் கொண்ட குழுவினர் சொகுசு பேருந்தில் பயணம் செய்தனர். இந்த சொகுசு பேருந்தானது இன்று
(நவ 16) அதிகாலை திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் அருகே சென்று கொண்டிருந்தது.
இந்த நிலையில் எதிர்பாராதவிதமாக கட்டுப்பாட்டை இழந்த சொகுசு பேருந்து கர்நாடகாவில் இருந்து மக்கா சோளம் ஏற்றிக்கொண்டு கோவைக்கு சென்று கொண்டிருந்த லாரி மீது மோதியது.இதில் பேருந்தின் முன்பக்க கண்ணாடி அப்பளம் போல் நொறுங்கியது.
இந்த விபத்தில், 20 பேர் காயம் அடைந்தனர். இதில் 6 பேருக்கு கை, கால்கள் முறிந்து, தலையில் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளது. இவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
சம்பவம் குறித்து தகவலறிந்த போலீசார் விபத்து ஏற்பட்ட இடத்திற்கு விரைந்தனர். இதனையடுத்து கிரேன் உதவியுடன் பேருந்து அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டது.
அதிகாலையில் நடந்த இந்த விபத்து காரணமாக அந்த தேசிய நெடுஞ்சாலையில் பரபரப்பு ஏற்பட்டது. விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Hindusthan Samachar / vidya.b