பராமரிப்பு பணி காரணமாக சென்னையில் நாளை மறுநாள் மின்தடை அறிவிப்பு
சென்னை, 16 நவம்பர் (ஹி.ச.) மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக சென்னையில் நாளை மறுநாள் (நவ 18) மின்தடை ஏற்படவுள்ளது. இது குறித்து தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: சென்னையில் வருகிற 18.11.202
பராமரிப்பு பணி காரணமாக சென்னையில் நாளை மறுநாள் மின்தடை அறிவிப்பு


சென்னை, 16 நவம்பர் (ஹி.ச.)

மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக சென்னையில் நாளை மறுநாள் (நவ 18) மின்தடை ஏற்படவுள்ளது.

இது குறித்து தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

சென்னையில் வருகிற 18.11.2025, செவ்வாய்க்கிழமை அன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

தரமணி: எம்.ஜி.ஆர். சாலை, சாந்தியப்பன் சாலை, கோதண்டராமன் தெரு, பெருங்குடி, ஓ.எம்.ஆர்., காமராஜர் நகர், குறிஞ்சி நகர், அண்ணா நெடுஞ்சாலை, நேரு நகர், கொட்டிவாக்கம், ஸ்ரீனிவாசா நகர், ஜெயேந்திரா காலனி, திருவள்ளுவர் தெரு, கற்பக விநாயகர் தெரு, சர்ச் சாலை, சிபிஐ காலனி மற்றும் மேற்சொன்ன இடங்களைச் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளிலும் மின்தடை செய்யப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / vidya.b