ஊஞ்சலூர் திருவிழாவை முன்னிட்டு தூத்துக்குடி-மைசூரு மற்றும் நாகர்கோவில்-கோவை விரைவு ரயில்கள் ஊஞ்சலூரில் நின்று செல்லும் - ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு
ஈரோடு, 16 நவம்பர் (ஹி.ச.) ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஊஞ்சலூர் திருவிழாவை முன்னிட்டு தென்னக ரெயில்வே சார்பில் பக்தர்களின் வசதிக்காக எக்ஸ்பிரஸ் ரெயில்களுக்கு தற்காலிக நிறுத்தங்கள் வழங்கப்பட்டுள்ளன. அதன்படி, தூத்துக்குடி-மைசூரு எக்ஸ்பிரஸ் ரெயில் (வ
ஊஞ்சலூர் திருவிழாவை முன்னிட்டு தூத்துக்குடி-மைசூரு மற்றும் நாகர்கோவில்-கோவை விரைவு ரயில்கள் ஊஞ்சலூரில் நின்று செல்லும் - ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு


ஈரோடு, 16 நவம்பர் (ஹி.ச.)

ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஊஞ்சலூர் திருவிழாவை முன்னிட்டு தென்னக ரெயில்வே சார்பில் பக்தர்களின் வசதிக்காக எக்ஸ்பிரஸ் ரெயில்களுக்கு தற்காலிக நிறுத்தங்கள் வழங்கப்பட்டுள்ளன.

அதன்படி, தூத்துக்குடி-மைசூரு எக்ஸ்பிரஸ் ரெயில் (வ.எண்.16235) வருகிற ஜனவரி மாதம் 6-ந் தேதி முதல் 12-ந் தேதி வரை ஊஞ்சலூரில் ஒரு நிமிடம் மட்டும் நின்று செல்லும்.

மறுமார்க்கத்தில் இந்த ரெயில் (வ.எண்.16236) வருகிற ஜனவரி மாதம் 5-ந் தேதி முதல் 11-ந் தேதி வரை ஒரு நிமிடம் மட்டும் நின்று செல்லும். நாகர்கோவில்-கோவை எக்ஸ்பிரஸ் கட்டண பாசஞ்சர் ரெயில் (வ.எண்.16321/16322) இரு மார்க்கங்களிலும் வருகிற ஜனவரி மாதம் 6-ந் முதல்

12-ந் தேதி வரை ஊஞ்சலூர் ரெயில் நிலையத்தில் ஒரு நிமிடம் மட்டும் தற்காலிகமாக நின்று செல்லும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

Hindusthan Samachar / vidya.b