சபரிமலை கோயிலில் மண்டல கால வழிபாட்டுக்காக இன்று மாலை நடை திறப்பு
சபரிமலை, 16 நவம்பர் (ஹி.ச.) சத்திரம் வனப் பகுதியில் பக்தர்களை வரவேற்று வைக்கப்பட்டுள்ள அலங்கார நுழைவாயில். பக்தர்களுக்கான வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொண்ட அதிகாரிகள். சபரிமலை ஐயப்​பன் கோயி​லில் டிச. 27-ம் தேதி மண்டல பூஜை நடை​பெறு​வதை முன்​ன
சபரிமலை


சபரிமலை, 16 நவம்பர் (ஹி.ச.)

சத்திரம் வனப் பகுதியில் பக்தர்களை வரவேற்று வைக்கப்பட்டுள்ள அலங்கார நுழைவாயில்.

பக்தர்களுக்கான வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொண்ட அதிகாரிகள்.

சபரிமலை ஐயப்​பன்

கோயி​லில் டிச. 27-ம் தேதி மண்டல பூஜை

நடை​பெறு​வதை முன்​னிட்டு இன்று மாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்​கப்பட உள்​ளது.

ஆன்​லைன் மூலம் 70 ஆயிரம் பக்​தர்​களும், ஸ்பாட் புக்​கிங் மூலம் 20 ஆயிரம் பேரும் தின​மும் தரிசனத்​துக்கு வர உள்​ளனர். இதையொட்​டி, பக்​தர்​கள் வசதிக்​காக பல்​வேறு

ஏற்​பாடு​கள்

செய்​யப்​பட்​டுள்​ளன.

இதுகுறித்து திரு​வி​தாங்​கூர் தேவசம் போர்டு அதி​காரி​கள் கூறிய​தாவது:

பம்​பை​யில் புதி​தாக 10 கொட்​டகைகள் அமைக்​கப்​பட்​டுள்​ளன. இங்கு 10 ஆயிரம் பக்​தர்​கள் தங்கி ஓய்​வெடுக்​கலாம். பம்பை ஹில்​டாப், சக்கு பாலத்​தில் சிறிய வாக​னங்​களுக்​கான நிறுத்​தம் அமைக்​கப்​பட்​டுள்​ளது.

பம்​பை​யில் இருந்து சந்​நி​தானம் வரை 56 இடங்​களில் பக்​தர்​களுக்கு சுக்கு நீர்

விநி​யோகிக்​கப்​படும்.

மொத்​தம் 41 நாட்​கள் மண்டல கால வழி​பாடு​கள் நடை​பெறும்.

தரிசன வரிசை​யில் நிற்​கும் பக்​தர்​களுக்கு பிஸ்​கெட், மூலிகை குடிநீர் வழங்​க​வும், அன்​ன​தானத்​துக்​கும்

ஏற்​பாடு செய்​யப்​பட்​டுள்​ளது.

பாத​யாத்​திரை பக்​தர்​களின் உடல்​வலி உபாதையை

சரி செய்ய 24 மணி நேர

பிசி​யோதெரபி

மையங்​களும்

அமைக்​கப்​பட்​டுள்​ளன.

அனைத்து ஏற்​பாடு​களும் முழுமை அடைந்​துள்​ளன.

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / Durai.J