Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 17 நவம்பர் (ஹி.ச.)
சபரிமலை பயணம் மேற்கொள்ளும் தமிழ்நாடு அய்யப்ப பக்தர்களுக்கு உதவுவதற்காக 24 மணி நேரமும் இயங்கும் தகவல் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது,
சபரிமலை ஸ்ரீதர்ம சாஸ்தா (அய்யப்பன்) திருக்கோவிலில் மண்டல பூஜை 17.11.2025 முதல் 27.12.2025 வரையும், மகரவிளக்கு ஜோதி திருவிழா 30.12.2025 முதல் 19.01.2026 வரையும் நடைபெறுவதை முன்னிட்டு சபரிமலை பயணம் மேற்கொள்ளும் தமிழ்நாடு அய்யப்ப பக்தர்களுக்கு உதவுவதற்காக இந்து சமய அறநிலையத்துறை
ஆணையர் அலுவலகத்திலும், மாநில எல்லையான களியக்காவிளையிலும், கேரள மாநிலம்-சபரிமலையிலும் 24 மணி நேரமும் இயங்கும் தகவல் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இத்தகவல் மையங்கள் 20.01.2026 வரை செயல்படும்.
சென்னை ஆணையர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள தகவல் மையத்தினை 1800 425 1757 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிலும், களியக்காவிளை தகவல் மையத்தினை 94880 73779, 94862 70443, 94428 72911 ஆகிய எண்களிலும், சபரிமலையில் அமைக்கப்பட்டுள்ள தகவல் மையத்தினை கீழ்க்காணும்
அலுவலர்களின் கைபேசி எண்களிலும் தொடர்பு கொண்டு தகவல்களை அறிந்து கொள்ளலாம்.
சபரிமலை தகவல் மையம்: 17.11.2025 முதல் 02.12.2025 வரை: வி. சிவக்குமார்- 94439 94342, ஆர். பிரேம்குமார்- 63858 06900, சி. சந்தீப்குமார்- 85310 70571
03.12.2025 முதல் 17.12.2025 வரை: எம்.சேர்மராஜா- 83440 21828, எல்.லால்கிருஷ்ணன்- 70949 06442, எஸ்.சதீஷ்குமார்- 75588 39969
18.12.2025 முதல் 02.01.2026 வரை: எம்.சுந்தர்- 89219 37043, ஆர்.சிவசங்கர்- 90806 50431, கே.சஜ்ஜீவன்- 99405 76898
03.01.2026 முதல் 20.01.2026 வரை: எச்.வெங்கடேஷ்- 98433 70229, சுதாகர்- 99425 05466, வி.ரமேஷ்- 84384 44770
இத்தகவல் மையங்களின் சேவையினை தமிழ்நாட்டில் இருந்து சபரிமலைக்கு செல்லும் அய்யப்ப பக்தர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / vidya.b