சென்னை - கோவை வந்தே பாரத் ரயில் சேவையில் மாற்றம்
சென்னை, 18 நவம்பர் (ஹி.ச.) சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து கோவை வரை இயக்கப்படும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் (20643) நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. திருநின்றவூர் பணிமனையில் நடைபெற்று வரும் பராமரிப்பு பணிகள
Vande Bharat Train


சென்னை, 18 நவம்பர் (ஹி.ச.)

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து கோவை வரை இயக்கப்படும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் (20643) நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

திருநின்றவூர் பணிமனையில் நடைபெற்று வரும் பராமரிப்பு பணிகள் காரணமாக, இந்த ரயில் வருகிற 23ம் தேதி மதியம் 3.15 மணிக்கு சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

திருநின்றவூர் பகுதியில் கடந்த சில நாட்களாக சீரமைப்பு மற்றும் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால், காட்பாடி–சென்னை சென்ட்ரல் இடையே செல்கின்ற பல எக்ஸ்பிரஸ் ரயில்கள் பகுதி நேரமாக ரத்து செய்யப்பட்டுள்ளன. அதே நேரத்தில், பயணிகள் அதிகமாக பயன்படுத்தும் வந்தே பாரத் ரயிலின் புறப்படும் நேரமும் ஒரு மணி நேரம் மாற்றப்பட்டுள்ளது.

ரயில்வே அதிகாரிகள் வெளியிட்ட தகவலின்படி,

பராமரிப்பு பணிகள் காரணமாக பாதை இயக்கத்தில் கட்டுப்பாடுகள் ஏற்பட்டுள்ளதால், ரயில் நேர மாற்றம் அவசியமாகியுள்ளது. பயணிகள் முன்பதிவு செய்திருந்தால், புதிய நேரத்தை சரிபார்த்து நிலையத்துக்கு வர வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

மேலும், 23-ந் தேதி மட்டும் பல எக்ஸ்பிரஸ் ரயில்கள் காட்பாடி முதல் சென்னை சென்ட்ரல் வரையிலான பகுதிகளில் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், பயணிகள் மாற்று ஏற்பாடுகளை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

திடீர் மாற்றம் காரணமாக பயணிகளுக்கு சிரமம் ஏற்படக்கூடும் என்பதால், ரயில்வே துறை அதன் இணையதளம் மற்றும் அறிவிப்பு பலகைகள் மூலம் தொடர்ந்து புதுப்பிப்புகளை வெளியிட்டு வருகிறது.

பயணத்துக்கு முன் ரயில் நேரத்தை கட்டாயம் சரிபார்க்க வேண்டுமெனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / ANANDHAN