Enter your Email Address to subscribe to our newsletters

தூத்துக்குடி, 19 நவம்பர் (ஹி.ச.)
தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் இளம்பகவத், நாளை தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் அனைவரும் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் கலந்து கொண்டு விவசாயம் சம்பந்தபட்ட குறைகளைத் தெரிவித்து பயன்பெறலாம் என தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
2025-ம் ஆண்டு நவம்பர் மாதத்திற்கான 'விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்' 20.11.2025, வியாழக்கிழமை அன்று காலை 10 மணியளவில் தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முத்து அரங்கத்தில் வைத்து நடைபெற உள்ளது.
எனவே தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் அனைவரும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு விவசாயம் சம்பந்தபட்ட குறைகளைத் தெரிவித்து பயன்பெறலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / JANAKI RAM