Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 20 நவம்பர் (ஹி.ச.)
இன்று சென்னை தரமணி, ஐ.டி. காரிடர் கோட்டத்தில் மின்நுகர்வோர் குறைதீர்
நடக்கிறது.
இது குறித்து மின் வாரியம் வெளியிட்ட அறிக்கையில்,
தரமணி, ஐ.டி காரிடர் கோட்ட மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் இன்று காலை 10.30 மணியளவில், தரமணி, சி.எஸ்.ஐ.ஆர் சாலையில் உள்ள 110 கி.வோ, டைடல் பார்க் துணை மின் நிலைய வளாகத்தில் உள்ள ஐ.டி காரிடர் கோட்ட செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடக்கிறது.
கூட்டத்தில் கலந்துகொண்டு பொதுமக்கள் தங்கள் குறைகளை தெரிவித்து நிவாரணம் பெற்றுக் கொள்ளலாம் என மேற்பார்வை பொறியாளர் கேட்டுக் கொண்டுள்ளார்.
இவ்வாறு அந்த அறிக்கை தெரிவித்துள்ளது.
Hindusthan Samachar / JANAKI RAM