Enter your Email Address to subscribe to our newsletters

பாட்னா, 20 நவம்பர் (ஹி.ச.)
பீஹார் மாநிலத்தில் அண்மையில் நடைபெற்று முடிந்த சட்டசபை தேர்தலில், ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி, 202 இடங்களை பிடித்து அமோக வெற்றி பெற்றது.
கூட்டணியில் இடம் பெற்ற பா.ஜ., 89; ஐக்கிய ஜனதா தளம் 85; லோக் ஜனசக்தி ராம் விலாஸ் பஸ்வான் கட்சி 19; ஹிந்துஸ் தானி அவாம் மோர்ச்சா 5, ராஷ்ட்ரிய லோக் மோர்ச்சா 4 இடங்களை பிடித்தன.என்.டி.ஏ., எனப்படும், தேசிய ஜனநாயக கூட்டணியின் புதிய எம்.எல்.ஏ.,க்கள் பங்கேற்ற கூட்டம் பாட்னாவில் நடைபெற்றது.
இதில் தற்போதைய முதல்வரும் ஐக்கிய ஜனதா தள தலைவருமான நிதிஷ் குமார் தே.ஜ.., கூட்டணி எம்.எல்.ஏ.,க்கள் குழுவின் தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.
இதையடுத்து, பீஹார் முதல்வராக, 10வது முறையாக இன்று (நவ.,20) நிதிஷ் குமார் பதவி ஏற்றார். முதலமைச்சர் நிதிஷ்குமாருக்கு ஆளுநர் ஆஃப்கான் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
துணை முதலமைச்சராக பாஜகவின் சாம்ராட் சவுத்ரி பதவியேற்றார்.
பீஹார் முதல்வராக நிதிஷ்குமார் பதவியேற்றதைத் தொடர்ந்து அமைச்சர்கள் அடுத்தடுத்து பதவியேற்றனர்.
காந்தி மைதானத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
Hindusthan Samachar / vidya.b