ஜனாதிபதி திரவுபதி முர்மு அனுப்பிய 14 விளக்க கேள்விகள் குறித்து சுப்ரீம் கோர்ட்டு இன்று தீர்ப்பு
புதுடெல்லி, 20 நவம்பர் (ஹி.ச.) சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க ஜனாதிபதிக்கும், கவர்னருக்கும் காலக்கெடு நிர்ணயித்து சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது. இந்த விவகாரத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு 14 விளக்க கே
இன்று ஜனாதிபதி திரவுபதி முர்மு அனுப்பிய 14 விளக்க கேள்விகள் குறித்து சுப்ரீம் கோர்ட்டு  தீர்ப்பு


புதுடெல்லி, 20 நவம்பர் (ஹி.ச.)

சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க ஜனாதிபதிக்கும், கவர்னருக்கும் காலக்கெடு நிர்ணயித்து சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.

இந்த விவகாரத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு 14 விளக்க கேள்விகளை சுப்ரீம் கோர்ட்டுக்கு அனுப்பியிருந்தார்.

இந்த விவகாரம் தொட்பாக தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு கடந்த செப்டம்பர் மாதம் 10 நாட்கள் விசாரணை நடத்தியது.

செப்டம்பர் 11-ந்தேதி நடந்த இறுதி விசாரணையின்போது தீர்ப்பு தள்ளிவைக்கப்பட்டது.

இதற்கிடையே இந்த விவகாரத்தில் இன்று (வியாழக்கிழமை) தீர்ப்பு அளிக்கப்படும் என்று சுப்ரீம் கோர்ட்டு அறிவித்துள்ளது.

Hindusthan Samachar / JANAKI RAM