Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 21 நவம்பர் (ஹி.ச.)
கேரள மாநிலத்தில் அடுத்த மாதம் 9 மற்றும் 11-ந் தேதிகளில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நடைபெற உள்ளது.
இந்த தேர்தலில் அ.தி.மு.க போட்டியிடப்போவதாக அக்கட்சி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
கேரள மாநிலத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகள் ஒன்றிணைந்து கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் வெற்றி பெற்றிடும் வகையில் சிறந்த முறையில் தேர்தல் பணிகள் ஆற்ற வேண்டும் என்று எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார்.
போட்டியிடும் 28 வேட்பாளர்களின் பெயர்களையும் அறிவித்துள்ளார்.
Hindusthan Samachar / vidya.b