பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலைமறியல்- ஊராட்சி மன்ற அலுவலகம் முற்றுகை
திண்டுக்கல், 21 நவம்பர் (ஹி.ச.) திண்டுக்கல் மாவட்டம் எரியோடு அருகே பாகாநத்தம் ஊராட்சி மன்ற அலுவலகத்தை தண்ணீர் வேண்டி பாகாநத்தம் புதூர் பொதுமக்கள் காலி குடங்களுடன் முற்றுகையிட்டனர். முன்னதாக காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் தற்போத
போராட்டம்


திண்டுக்கல், 21 நவம்பர் (ஹி.ச.)

திண்டுக்கல் மாவட்டம் எரியோடு அருகே பாகாநத்தம் ஊராட்சி மன்ற அலுவலகத்தை தண்ணீர் வேண்டி பாகாநத்தம் புதூர் பொதுமக்கள் காலி குடங்களுடன் முற்றுகையிட்டனர்.

முன்னதாக காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் தற்போது தண்ணீர் வேண்டி காலி குடங்களுடன் பாகாநத்தம் ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டுள்ளனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற எரியோடு போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.

Hindusthan Samachar / Durai.J