கோவில்பட்டி அருகே மரத்தில் கார் மோதி விபத்து - பெண் ஒருவர் பலி
தூத்துக்குடி, 22 நவம்பர் (ஹி.ச.) தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள திருவேங்கடம் சத்திரப்பட்டி பகுதியை சேர்ந்தவர் ஆபிரகாம் ஞானதுரை. இவர் அங்குள்ள சர்ச் ஒன்றில் பாதிரியாராக பணியாற்றி வருகிறார். இவர் மதுரையில் நடைபெற்ற உறவினர் வீட்டு நி
கார்


தூத்துக்குடி, 22 நவம்பர் (ஹி.ச.)

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள திருவேங்கடம் சத்திரப்பட்டி பகுதியை சேர்ந்தவர் ஆபிரகாம் ஞானதுரை.

இவர் அங்குள்ள சர்ச் ஒன்றில் பாதிரியாராக பணியாற்றி வருகிறார்.

இவர் மதுரையில் நடைபெற்ற உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் தனது மனைவி குணச்செல்வியுடன் பங்கேற்று விட்டு காரில் ஊருக்கு திரும்பி உள்ளார்.

காரை ஆபிரகாம் ஓட்டி வந்துள்ளார். கார் இளையரசனேந்தல் பகுதியில் சென்ற போது கார் கட்டுப்பாட்டினை இழந்து அங்கிருந்து மரத்தின் மோதி விபத்துக்குள்ளானது.

இதில் சம்பவ இடத்தில் குணச்செல்வி(63), பரிதாபமாக உயிரிழந்தார். ஆபிரகாம் ஞானதுரை காயமடைந்தார்.

இது குறித்து தகவல் கிடைத்ததும் கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உயிரிழந்த குணச்செல்வி உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் காயம் அடைந்த ஆபிரகாம் ஞானதுரையை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர்.

விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Hindusthan Samachar / Durai.J