Enter your Email Address to subscribe to our newsletters

திருப்பூர், 22 நவம்பர் (ஹி.ச.)
திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள. பஞ்சலிங்க அருவியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான குருமலை குழிப்பட்டி ஜல்லிமுத்தான் பாறை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தற்போது கனமழை பெய்து வருவதால் பஞ்சலிங்க அருவியில் நீர்வரத்து தடுப்புகளை தாண்டி ஆர்ப்பரித்து வருகிறது.
இதனால் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு கருதி தற்பொழுது திருமூர்த்தி மலை அமணலிங்கேஸ்வரர் கோவில் நிர்வாகம் தரப்பில் பஞ்சலிங்க அருவியில்
குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதனால் இன்று விடுமுறை தினம் என்பதால் பஞ்சலிங்க அருவிக்கு குளிப்பதற்கு வருகை புரிந்த ஏராளமான சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.
இதற்கிடையில் பஞ்சலிங்க அருவியின் நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோவில் நிர்வாகம் சார்பில் ஊழியர்கள் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
Hindusthan Samachar / ANANDHAN