Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 22 நவம்பர் (ஹி.ச.)
ஐயப்ப பக்தர்களின் வசதிக்காக திருப்பூர் வழியாக சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளன.
அதன்படி சார்லப்பள்ளியில் (ஐதராபாத்) இருந்து வருகிற 24-ந்தேதி காலை 10 மணிக்கு புறப்படும் ரெயில் (வண்டி எண் 07115) 25-ந் தேதி மாலை 5.30 மணிக்கு கோட்டயத்தை சென்றடையும்.
கோட்டயத்திலிருந்து 25-ந் தேதி இரவு 8.30 மணிக்கு புறப்படும் ரெயில் (வண்டி எண் 07116) 27-ந்தேதி அதிகாலை 2.30 மணிக்கு சார்லப்பள்ளியை சென்றடையும்.
சார்லப்பள்ளியிலிருந்து கோட்டயம் செல்லும்போது 25-ந்தேதி காலை 9.13மணிக்கும், கோட்டயத்திலிருந்து சார்லப்பள்ளி செல்லும் போது 27-ந் தேதி அதிகாலை 3 மணிக்கும் ரெயில்கள் திருப்பூருக்கு வந்து 2 நிமிடம் நின்று செல்லும். மேலும் திருப்பூர் வழியாக கோவை-பனாரஸ் இடையேயும் சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகிறது.
டிசம்பர் 3-ந்தேதி மாலை 6 மணிக்கு கோவையிலிருந்து புறப்படும் ரெயில் (வண்டிஎண் 06005) 3-வது நாள் பனாரஸை சென்றடையும். பனாரஸிலிருந்து டிசம்பர்
9-ந் தேதி இரவு 11 மணிக்கு புறப்படும் ரெயில் (வண்டி எண் 06006) 4-வது நாள் காலை கோவையை வந்தடையும் என தெற்கு ரயில்வே தகவல் தெரிவித்துள்ளது.
Hindusthan Samachar / vidya.b