திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
கன்னியாகுமரி, 22 நவம்பர் (ஹி.ச.) கன்னியாகுமரி மாவட்டத்தில் ‘குமரியின் குற்றாலம்’ என்று அழைக்கப்படும் திற்பரப்பு அருவியில் குளிக்க ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருவது வழக்கம். விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் இங்கு அதிகரித்து காணப
திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை


கன்னியாகுமரி, 22 நவம்பர் (ஹி.ச.)

கன்னியாகுமரி மாவட்டத்தில் ‘குமரியின் குற்றாலம்’ என்று அழைக்கப்படும் திற்பரப்பு அருவியில் குளிக்க ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருவது வழக்கம். விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் இங்கு அதிகரித்து காணப்படும்.

இந்த நிலையில் கன்னியாகுமரியில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழை காரணமாக பேச்சிப்பாறை அணைக்கு வரும் நீர்வரத்து அதிகரித்தது.

கனமழையின் காரணமாக கோதையாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால் திற்பரப்பு அருவியில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

ஆர்ப்பரித்துச் செல்லும் வெள்ளநீரால் திற்பரப்பு அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க இன்று (நவ 22) மாவட்ட நிர்வாகம் சார்பில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதனால் அருவியில் குளிக்க ஆவலுடன் வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

Hindusthan Samachar / vidya.b