புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தூத்துக்குடியில் கனமழை எச்சரிக்கை - மீனவர்கள் 25ம் தேதி வரை கடலுக்கு செல்ல தடை
தூத்துக்குடி, 23 நவம்பர் (ஹி.ச.) புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, உட்பட 16 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் தென் தமிழக கடலோரப் பகுதிகள், மன்
புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தூத்துக்குடியில் கனமழை எச்சரிக்கை - மீனவர்கள் 25ம் தேதி வரை கடலுக்கு செல்ல தடை


தூத்துக்குடி, 23 நவம்பர் (ஹி.ச.)

புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, உட்பட 16 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் தென் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் 35 முதல் 45 கி.மீ. வேகத்திலும் இடையிடையே 60 கி.மீ. வேகத்திலும் காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் வருகிற 25ம் தேதி வரை கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / JANAKI RAM