Enter your Email Address to subscribe to our newsletters


கோவை, 23 நவம்பர் (ஹி.ச.)
கோவை தொண்டாமுத்தூர் அடுத்த தாளியூர் பேரூராட்சிக்குட்பட்ட உலியம்பாளையம் பகுதியில் 5-ஆம் ஆண்டாக நடைபெற்ற அம்மா நினைவுக் கோப்பை கிரிக்கெட் போட்டியினை முன்னாள் அமைச்சரும் அதிமுக தலைமை நிலைய செயலாளருமான எஸ்.பி வேலுமணி துவக்கி வைத்தார்.
மேலும் கிரிக்கெட் போட்டியை துவக்கி வைத்து கிரிக்கெட் வீரர்களுடன் கிரிக்கெட் விளையாடியும் வீரர்களை உற்சாகப்படுத்தினார்.
மேலும் சிறப்பாக விளையாடி திறமைகளை வெளிப்படுத்திய கிரிக்கெட் வீரர்களுக்கு நினைவு பரிசு மற்றும் பரிசுத்தொகை வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டார்.
மேலும் வெற்றி பெற்ற அணிகளுக்கு கோப்பைகளை வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தார்.
Hindusthan Samachar / V.srini Vasan