Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 23 நவம்பர் (ஹி.ச.)
ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெற்ற ஜி20 உச்சிமாநாட்டின் ஒரு பகுதியாக, பிரதமர் நரேந்திர மோடி இத்தாலிய பிரதமர் ஜியோர்ஜியா மெலோனியை நேற்று
(நவ 22) சந்தித்தார்.
இந்த நிலையில் ஜமைக்காவின் பிரதமர் ஆண்ட்ரூ ஹோல்னஸை இன்று (நவ 23) சந்தித்துள்ளார்.
இது குறித்து பிரதமர் மோடி இன்று (நவ 23) எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது,
ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெற்ற ஜி20 உச்சிமாநாட்டின் போது ஜமைக்காவின் பிரதமர் திரு. ஆண்ட்ரூ ஹோல்னஸுடன் கலந்துரையாடினேன். இந்தியாவும் ஜமைக்காவும் வரலாற்றால் வடிவமைக்கப்பட்ட நட்பால் பிணைக்கப்பட்டு, கலாச்சார இணைப்புகளால் வளப்படுத்தப்பட்டுள்ளன. கூட்டு முன்னேற்றத்திற்கான ஆழ்ந்த அர்ப்பணிப்புடன் எங்கள் கூட்டாண்மை தொடர்ந்து வளர்ந்து வருகிறது.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
Hindusthan Samachar / vidya.b