3 நாட்கள் தென் ஆப்பிரிக்கா சுற்றுப்பயணத்தை நிறைவு செய்து நாடு திரும்பினார் பிரதமர் மோடி
புதுடெல்லி, 24 நவம்பர் (ஹி.ச.) ஜி20 கூட்டமைப்பின் உச்சிமாநாடு தென் ஆப்பிரிக்காவின் ஜோகனர்ஸ்பர்க் நகரில் நடைபெற்றது. அதில் பங்கேற்பதற்காக 3 நாட்கள் அரசு முறை சுற்றுப்பயணமாக பிரதமர் மோடி தென் ஆப்பிரிக்கா சென்றார். அங்கு விமான நிலையத்தில் அவருக்கு
3 நாட்கள் தென் ஆப்பிரிக்கா சுற்றுப்பயணத்தை நிறைவு செய்து நாடு திரும்பினார் பிரதமர் மோடி


புதுடெல்லி, 24 நவம்பர் (ஹி.ச.)

ஜி20 கூட்டமைப்பின் உச்சிமாநாடு தென் ஆப்பிரிக்காவின் ஜோகனர்ஸ்பர்க் நகரில் நடைபெற்றது.

அதில் பங்கேற்பதற்காக 3 நாட்கள் அரசு முறை சுற்றுப்பயணமாக பிரதமர் மோடி தென் ஆப்பிரிக்கா சென்றார். அங்கு விமான நிலையத்தில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

தொடர்ந்து ஜி20 உச்சிமாநாட்டில் பங்கேற்றார். இந்த மாநாட்டில் பல்வேறு உலக நாடுகளின் தலைவர்களை பிரதமர் மோடி சந்தித்து பேசினார்.

மேலும், தென் ஆப்பிரிக்காவின் அதிபர் சிறில் ரமபோசாவை பிரதமர் மோடி சந்தித்தார். இந்த சந்திப்பின்போது இந்தியா-தென் ஆப்பிரிக்கா இடையிலான இருநாட்டு உறவு, வர்த்தகம், முதலீடு, தொழில்நுட்பம் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

ஜி20 மாநாடு குறித்து ‘எக்ஸ்’ தளத்தில் பதிவிட்ட பிரதமர் மோடி,

ஜோகன்னஸ்பர்க் ஜி20 உச்சிமாநாட்டில் உலகத் தலைவர்களுடனான எனது சந்திப்புகள் பயனுள்ளதாக இருந்தன. இந்த சந்திப்புகள் பல்வேறு நாடுகளுடனான இந்தியாவின் இருதரப்பு உறவுகளை ஆழப்படுத்தும். உச்சிமாநாட்டை ஏற்பாடு செய்ததற்காக தென்னாப்பிரிக்காவின் அற்புதமான மக்கள், அதிபர் ரமபோசா மற்றும் தென் ஆப்பிரிக்க அரசாங்கத்திற்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்.

என்று தெரிவித்திருந்தார்.

தொடர்ந்து தென் ஆப்பிரிக்கா சுற்றுப்பயணத்தை நிறைவு செய்துவிட்டு பிரதமர் மோடி இன்று நாடு திரும்பினார்.

Hindusthan Samachar / JANAKI RAM