தென்காசி பேருந்து விபத்தில் 6 பேர் உயிரிழப்பு - தவெக தலைவர் விஜய் இரங்கல்
சென்னை, 24 நவம்பர் (ஹி.ச.) தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் நேர்ந்த பேருந்து விபத்தில் பெண்கள் உள்பட 6 பேர் உயிரிழந்ததற்கு தவெக தலைவர் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் எக்ஸ் தளத்தில் இன்று (நவ 24) கூறியிருப்பதாவது, தென்க
தென்காசி பேருந்து விபத்தில் 6 பேர் உயிரிழப்பு - தவெக தலைவர் விஜய் இரங்கல்


சென்னை, 24 நவம்பர் (ஹி.ச.)

தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் நேர்ந்த பேருந்து விபத்தில் பெண்கள் உள்பட 6 பேர் உயிரிழந்ததற்கு தவெக தலைவர் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் எக்ஸ் தளத்தில் இன்று (நவ 24) கூறியிருப்பதாவது,

தென்காசி மாவட்டம், கடையநல்லூர் அருகே தனியார் பேருந்துகள் மோதிக்கொண்ட விபத்தில், பெண்கள் உள்பட 6 பேர் உயிரிழந்த செய்தி, மிகுந்த மன வேதனையை அளிக்கிறது. அவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

விபத்தில் படுகாயம் அடைந்தவர்கள் பூரணமாகக் குணமடையும் வகையில், தேவையான அனைத்து மருத்துவ வசதிகளையும் ஏற்படுத்தி, உயர்தரமான சிகிச்சை அளிக்க வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Hindusthan Samachar / vidya.b