தமிழ் கற்போம்,தமிழைக் கற்கலாம் - காசி தமிழ்ச்சங்கமத்தின் மைய கருத்து
வாரணாசி, 25 நவம்பர் (ஹி.ச.) மத்திய அரசின் கல்வி அமைச்சகம் சார்பில், தமிழ்நாடு மற்றும் காசி (வாரணாசி) ஆகிய இரு பண்டைய கலாசார மையங்களுக்கு இடையேயான பிணைப்பை வலுப்படுத்தும் நோக்கில் நடத்தப்படும் காசி தமிழ்ச் சங்கமத்தின் நான்காவது பதிப்பு, வரும் டிசம்
காசி தமிழ் சங்கம்


வாரணாசி, 25 நவம்பர் (ஹி.ச.)

மத்திய அரசின் கல்வி அமைச்சகம் சார்பில், தமிழ்நாடு மற்றும் காசி (வாரணாசி) ஆகிய இரு பண்டைய கலாசார மையங்களுக்கு இடையேயான பிணைப்பை வலுப்படுத்தும் நோக்கில் நடத்தப்படும் காசி தமிழ்ச் சங்கமத்தின் நான்காவது பதிப்பு, வரும் டிசம்பர் 2 ஆம் தேதி தொடங்குகிறது.

இந்த நிகழ்வு டிசம்பர் 15 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளதுடன், நிறைவு விழா ராமேஸ்வரத்தில் நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த ஆண்டிற்கான காசி தமிழ்ச் சங்கமத்தின் மையக் கருத்தாக தமிழ் கற்போம் - தமிழைக் கற்கலாம் என்பது அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் செம்மொழியான தமிழின் செழுமையை நாடு முழுவதும் பரப்புவதே இதன் முக்கிய நோக்கம் ஆகும்.

மாணவர்கள், ஆசிரியர்கள், எழுத்தாளர்கள், ஆன்மீக அறிஞர்கள் உட்பட மொத்தம் 1,400-க்கும் மேற்பட்டோர் தமிழ்நாட்டிலிருந்து பிரதிநிதிகளாகப் பங்கேற்கவுள்ளனர்.

என்பது குறிப்பிடத்தக்கது.

Hindusthan Samachar / Durai.J