திருமணமான 18 நாளில் புதுப்பெண் மாயம் - திடுக்கிடும் தகவல்!
கன்னியாகுமரி, 25 நவம்பர் (ஹி.ச.) கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே உள்ள செம்பொன்விளை கேசவன்சேரி விளையை சேர்ந்த 31 வயது இளைஞர். வெளிநாட்டில் வேலை பார்த்த இவர் தற்போது மணவாளக்குறிச்சியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.
Wedding Album


கன்னியாகுமரி, 25 நவம்பர் (ஹி.ச.)

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே உள்ள செம்பொன்விளை கேசவன்சேரி விளையை சேர்ந்த 31 வயது இளைஞர்.

வெளிநாட்டில் வேலை பார்த்த இவர் தற்போது மணவாளக்குறிச்சியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

இவருக்கும், தூத்துக்குடி மாவட்டம் நாசரேத்தை சேர்ந்த 24 வயது பெண்ணுக்கும் கடந்த 3-ம் தேதி இரு வீட்டார் பெற்றோர் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது.

பிறகு மணமக்கள் இருவரும் உறவினர் வீடுகளுக்கு விருந்துக்கு சென்றபடி இருந்தனர். இந்நிலையில் திருமணமாகி 18 நாளில் அதாவது கடந்த 21ம் தேதி வெளியில் சென்று வருவதாக கூறிய புதுப்பெண் நீண்ட நேரமாகியும் மீண்டும் வீடு திரும்பவில்லை.

இதனால் அதிர்ச்சி அடைந்த மாமியார் நடந்த சம்பவத்தை மகனிடம் கூறியுள்ளார். இதனையடுத்து மனைவியை கணவர் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. அவரது செல்போனை தொடர்பு கொண்ட போதும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. என்ன செய்வதன்று தெரியாமல் கணவர் ஆடிப்போனார்.

இந்நிலையில் கணவர் வீட்டின் அறையில் வந்து பார்த்த போது அதிர்ச்சி காத்திருந்தது. அதாவது தாலி செயின் மட்டும் இருந்தது. இதனால் தாலியை புதுப்பெண் கழற்றி வைத்து விட்டு சென்றிருக்கலாம் என நினைத்தனர். இந்த பரபரப்பான சூழ்நிலையில் வாலிபரின் செல்போனுக்கு வாட்ஸ்-அப் மூலமாக அவரது மனைவி வாய்ஸ் மெசேஜ் ஒன்றை அனுப்பி இருந்தார்.

அதில், விருப்பம் இல்லாமல் கட்டாயப்படுத்தி எனக்கு திருமணம் செய்து வைத்து விட்டனர். உங்களை ஏமாற்றியதற்கு என்னை மன்னித்து விடுங்கள். என்னை தேடாதீங்க, நான் வரமாட்டேன்.

தாலியைகூட வேண்டாம் என்று கழற்றி வைத்துவிட்டு வந்து விட்டேன். என்னால் உங்க கூட சந்தோஷமாக வாழ முடியல ‘ப்ளீஸ்’ என்று அனுப்பி உள்ளார்.

இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த இளம்பெண்ணின் கணவர் மற்றும் உறவினர்கள் செய்வதறியாது திகைத்தனர்.

பின்னர் காவல் நிலையத்தில் புகார் அளிக்க திட்டமிட்டுள்ளனர்.

Hindusthan Samachar / ANANDHAN