கர்ப்பிணி பெண் எலி மருந்து குடித்து தற்கொலை - உயிருடன் மீட்கப்பட்ட சிசு
திருச்சி, 25 நவம்பர் (ஹி.ச.) திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள பத்தாளப் பேட்டை மேட்டு தெருவை சேர்ந்தவர் பாஸ்கர் சேவியர். இவருக்கு திருமணமாகி 25 வயதில் ரோஸி என்ற மனைவி இருந்துள்ளார். அந்த பெண் 8 மாதம் கர்ப்பமாக இருந்துள்ளார். இந்த ந
Mother with kid


திருச்சி, 25 நவம்பர் (ஹி.ச.)

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள பத்தாளப் பேட்டை மேட்டு தெருவை சேர்ந்தவர் பாஸ்கர் சேவியர்.

இவருக்கு திருமணமாகி 25 வயதில் ரோஸி என்ற மனைவி இருந்துள்ளார். அந்த பெண் 8 மாதம் கர்ப்பமாக இருந்துள்ளார்.

இந்த நிலையில், குடும்ப தகராறு காரணமாக கடும் மன உளைச்சலுக்கு ஆளான ரோஸி எலி மருத்து குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். வயிற்றில் குழந்தை உள்ள நிலையில், கர்ப்பிணி எலி மருந்து குடித்தது குடும்பத்தினரை கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

எலி மருந்து குடித்து மூச்சு, பேச்சு இல்லாமல் கிடந்த 8 மாத கர்ப்பிணையை மீட்ட அவரது குடும்பத்தினர் அவரை உடனடியாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அவருக்கு அங்கு தொடர் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்துள்ளது. ஆனால், கர்ப்பிணியின் உடல் நலத்தில் நன்ன முன்னேற்றம் எதுவும் ஏற்படாமல் இருந்துள்ளது. கர்ப்பிணியின் உடல்நிலை மோசமாக இருந்த நிலையில், அவரது வயிற்றில் இருந்த குழந்தை ஆரோக்கியமாக இருந்துள்ளது.

பெண்ணின் உடல்நிலையை கண்ட மருத்துவர்கள் குழந்தையை காப்பாற்றும் முயற்சியில் இறங்கியுள்ளனர். அதாவது அறுவை சிகிச்சை மூலம் மருத்துவர்கள் குழந்தையை வெளியே எடுத்துள்ளனர்.

இதில் அந்த பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. அந்த குழந்தை மிகவும் ஆரோக்கியமாகவும் இருந்துள்ளது. ஆனால், அந்த கர்ப்பிணி பெண்ணோ சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இந்த விவகாரம் குறித்து மருத்துவமனை நிர்வாகம் அளித்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், கர்ப்பிணியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், கர்ப்பிணியின் மரணம் தொடர்பாக அவரது குடும்பத்தாரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Hindusthan Samachar / ANANDHAN