முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார்
சென்னை, 26 நவம்பர் (ஹி.ச.) முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், அதிமுகவின் மூத்த நிர்வாகி ஆவார். ஈரோடு மாவட்டத்திலிருந்து 9 முறை எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்ட இவர் அதிமுகவில் அமைச்சராகவும் கட்சியில் பல்வேறு பொறுப்புகளிலும் பணியாற்றியவர். அவருக
முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார்


சென்னை, 26 நவம்பர் (ஹி.ச.)

முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், அதிமுகவின் மூத்த நிர்வாகி ஆவார். ஈரோடு மாவட்டத்திலிருந்து 9 முறை எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்ட இவர் அதிமுகவில் அமைச்சராகவும் கட்சியில் பல்வேறு பொறுப்புகளிலும் பணியாற்றியவர்.

அவருக்கும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கும் சில மாதங்களாக கருத்து வேறுபாடு நிலவி வந்த நிலையில் ஓபிஎஸ் டிடிவி தினகரன் உள்ளிட்டோரை கட்சியில் மீண்டும் இணைக்க வேண்டும் என்று கூறிய செங்கோட்டையன், அதற்கு கட்சி தலைமைக்கு காலக்கெடு விதித்தார்.

இதனால் அவரது கட்சி பதவிகள் பறிக்கப்பட்டன. ஓபிஎஸ், டிடிவி தினகரன், சசிகலா ஆகியோருடன் தேவர் குருபூஜை விழாவில் செங்கோட்டையன் கலந்து கொண்டதைத் தொடர்ந்து, அதிமுகவில் இருந்தும் அவர் நீக்கப்பட்டார்.

இந்நிலையில், இன்று

(நவ 26) தனது எம்எல்ஏ பதவியை செங்கோட்டையன் ராஜினாமா செய்தார்.

சட்டசபை வளாகத்துக்கு வந்த அவர், தனது ராஜினாமா கடிதத்தை, சபாநாயகர் அப்பாவு இடம் வழங்கினார்.அடுத்த கட்ட முடிவு பற்றி செய்தியாளர்கள் கேட்டபோது, ''இன்னும் ஒரு நாள் பொறுத்திருங்கள்,'' என்று கூறினார்.

செங்கோட்டையன் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக்கழகத்தில் இணைய முடிவு செய்துள்ளார் என தகவல்கள் வெளிவந்துள்ளன.

இதுவரை வெளிப்படையாக அவர் அறிவிப்பு எதுவும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Hindusthan Samachar / vidya.b