Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 26 நவம்பர் (ஹி.ச.)
அரசியலமைப்பு தினத்தை முன்னிட்டு காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் இன்று
(நவ 26) பதிவிட்டிருப்பதாவது,
இந்திய அரசியலமைப்பு என்பது ஒரு புத்தகம் மட்டுமல்ல. இது நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் செய்யப்பட்ட ஒரு புனித வாக்குறுதியாகும்.
ஒருவர் எந்த மதம் அல்லது சாதியைச் சேர்ந்தவராக இருந்தாலும், எந்தப் பகுதியில் இருந்து வந்தவராக இருந்தாலும், எந்த மொழியைப் பேசினாலும், ஏழையாக இருந்தாலும், சமத்துவம், மரியாதை மற்றும் நீதி கிடைக்கும் என்பதே அந்த வாக்குறுதி.
அரசியலமைப்பு என்பது ஏழைகள் மற்றும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கான ஒரு பாதுகாப்பு கேடயம். அது அவர்களின் வலிமை மட்டுமல்லாமல், இது ஒவ்வொரு குடிமகனின் குரலாக இருக்கிறது. அரசியலமைப்பு பாதுகாப்பாக இருக்கும் வரை, ஒவ்வொரு இந்தியனின் உரிமைகளும் பாதுகாப்பாக இருக்கும்.
அரசியலமைப்பின் மீது எந்தவிதமான தாக்குதலையும் நாம் அனுமதிக்க மாட்டோம் என உறுதி மேற்கொள்வோம். அதைப் பாதுகாப்பது எனது கடமை, அதன் மீதான ஒவ்வொரு தாக்குதலுக்கும் நான் முன்னால் நின்று எதிர்ப்பேன்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
Hindusthan Samachar / vidya.b